கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.16.75 கோடியில் உயர்மட்ட பாலம்: அமைச்சா் அடிக்கல் நா...
காஸா நிவாரண முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 80 பேர் பலி
காஸா முழுவதும் இஸ்ரேல் புதன்கிழமை நடத்திய கடுமையான தாக்குதலில் குழந்தைகள் உள்பட 80 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த வாரத்தில், இஸ்ரேல் தாக்குதலில் பலி எண்ணிக்கை புதன்கிழமைதான் இந்த அளவுக்குக் கடுமையாக உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தராஜ் மாவட்டத்தில் எப்போதும் கூட்டமாகக் காணப்படும் பிராஸ் சந்தை மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதில் அங்கிருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.