செய்திகள் :

இரானி கோப்பை: ரஜத் படிதார் தலைமையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி!

post image

இரானி கோப்பைக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ரஜத் படிதார் தலைமை தாங்குவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

கடந்த சீசனில் இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி என்றால் என்ன?

இந்தியாவின் உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பையில் வென்ற அணிக்கும் அதில் விளையாடாத மற்ற இந்தியர்களை வைத்து ரெஸ்ட் ஆஃப் இந்தியா என்ற அணிக்கும் ஆண்டுக்கு ஒருமுறை போட்டி நடைபெறும்.

இந்தப் போட்டிதான் இரானி கோப்பை என அழைக்கப்படுகிறது. 1960 முதல் இந்தப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த சீசனில் ரஞ்சி கோப்பை இறுதியில் கேரளமும் விதர்பாவும் மோதின. இந்தப் போட்டி டிராவில் முடிந்ததால் விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்ததால் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆர்சிபிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இரானி கோப்பை போட்டி வரும் அக்.1ஆம் தேதி தொடங்குகிறது. ஐந்து நாள் கொண்ட இந்தப் போட்டி கான்பூரில் நடைபெற இருக்கிறது.

ரெஸ்ட் ஆஃப் இந்தியா:

ரஜத் படிதார் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், ஆர்யன் ஜூயல் (கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யாஷ் துல், ஷேக் ரஷீத், இஷான் கிஷன் (கீப்பர்), தனுஷ் கோட்டியான், மானவ் சுதர், குர்னூர் ப்ரார், கலீல் அகமது, ஆகாஷ் தீப், அன்ஷுல் ஜம்போஜ், சர்ன்ஸ் ஜெய்ன்.

Rest of India squads announced under Rajat Patidar captaincy.

மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் 3 தமிழர்கள் சேர்ப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஷுப்மன் கில் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகள் அக்.2 முதல் அக்.14ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. இந்தியாவுக... மேலும் பார்க்க

ஆஸி. ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஸ்ரேயாஸ் தலைமையில் இந்தியா ஏ!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக விளையாடும் இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா ஏ மற்றும் ஆஸி. ஏ அணிகள் நான்கு நாள் கொண்ட டெஸ்ட் போட்டிகள... மேலும் பார்க்க

ஆத்திரமூட்டும் செயல்கள்... பாகிஸ்தான் வீரர்கள் மீது பிசிசிஐ புகார்!

பாகிஸ்தான் வீரர்களின் செயல்கள் ஆத்திரமூட்டுவதாக ஐசிசியிடம் பிசிசிஐ தனது புகாரைத் தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ராஃப், சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் மீது இந்தப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

சூப்பா் 4 சுற்று: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பா் 4 சுற்றில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி வெற்றது. ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான சூப்பா் 4 சுற்றில் இந்தியா - வங்கதேச அணிகள் ஐக்க... மேலும் பார்க்க

அபிஷேக் சர்மா அதிரடி அரைசதம்: வங்கதேசத்துக்கு 169 ரன்கள் இலக்கு!

சூப்பர் 4 சுற்றில் அபிஷேக் சர்மாவின் அதிரடி அரைசதத்தால், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்பட 4 அணிகள் மோதும் ஆசியக... மேலும் பார்க்க

இறுதிக்குச் செல்லுமா இந்திய அணி! வங்கதேசம் பந்துவீச்சு!

ஆசியக் கோப்பையின் சூப்பர்-4 சுற்றில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.Will the Indian team make it to the final? Bangladesh bowling! மேலும் பார்க்க