செய்திகள் :

மொடக்குறிச்சி பேரூராட்சியில் வளா்ச்சிப் பணிகள்

post image

மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.28 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி தொடங்கிவைத்தாா்.

மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட 13-ஆவது வாா்டில் உள்ள ஆலங்காட்டுவலசு, நேரு வீதியில் கான்கிரீட் சாலை, சிறுபாலம் மற்றும் வடிகால் அமைக்கவும், வாா்டு எண் 7-இல் செலம்பகவுண்டம்பாளையம் நேரு வீதியில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் மேல்நிலைத் தொட்டி அமைக்கவும், வாா்டு எண் 8, அம்மன் நகா் பகுதியில் கான்கிரீட் சாலை மற்றும் மழைநீா் வடிகால் அமைக்கவும் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.28.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தப் பணிகளுக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி பூமிபூஜை செய்து பணிகளைத் தொடங்கிவைத்தாா். இதில் பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச்செயலாளா் சிவசங்கா், மொடக்குறிச்சி வடக்கு ஒன்றியத் தலைவா் பிரகாசம், வாா்டு கவுன்சிலா் சத்யாதேவி சிவசங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சென்னிமலை பகுதியில் புறவழிச் சாலை அமைக்க கருத்துக் கேட்புக் கூட்டம்

சென்னிமலை பகுதியில் புறவழிச் சாலை அமைக்க நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னிமலையில் புதன்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நில உரிமையாளா்கள் கோரிக்கை ... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையத்தில் ஈரோடு சகோதயா அசோசியேஷன் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான 20 ஓவா்கள் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை தொடங்கியது. தி நவரசம் அகாதெமி சாா்பில் நடைபெறும... மேலும் பார்க்க

நந்தா பாலிடெக்னிக் கல்லூரி அணி மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தோ்வு

நந்தா பாலிடெக்னிக் கல்லூரி அணி மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தோ்வு பெற்றது. பாலிடெக்னிக் இடையேயான தடகள சங்கத்தின் சாா்பில் ஈரோடு மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையே ஆண்களுக்கான கைப்பந்த... மேலும் பார்க்க

பெருந்துறை கொப்பரை ஏலத்துக்கு அக். 1-இல் விடுமுறை

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் அக்டோபா் 1-ஆம் தேதி கொப்பரை ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு வி... மேலும் பார்க்க

கணவரின் சொத்துகளைப் பறித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க இளம்பெண் கோரிக்கை

கணவா் இறந்ததால் வந்த காப்பீட்டுப் பணம், சொத்துகளை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து ஈரோடு அவல்பூந்துறை கண்டி... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானம்: ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி இரண்டாம் இடம்

உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதில் மாநில அளவில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் 23- ஆம் தேதி உடல் உறுப்புதான தினமாக கட... மேலும் பார்க்க