செய்திகள் :

பங்குச் சந்தை நிலவரம்: ஆட்டோ, ஐடி பங்குகள் சரிவு!

post image

தொடர்ந்து 5-வது நாளாக இன்றும்(வியாழக்கிழமை) பங்குச் சந்தை சரிவில் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,574.31 புள்ளிகளில் சரிவுடன் தொடங்கியது. காலை 11.30 12 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 118.32 புள்ளிகள் குறைந்து 81,605.69 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 30.70 புள்ளிகள் குறைந்து 25,026.20 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

கடந்த வாரம் பங்குச் சந்தைகள் ஓரளவு ஏற்றத்தைச் சந்தித்த நிலையில் வார இறுதி நாளில் மட்டும் கடும் சரிவைச் சந்தித்தது. இந்த வாரமும் தொடர்ந்து 4-ம் நாளாக பங்குச் சந்தைகள் சரிவில் வர்த்தகமாகி வருகிறது முதலீட்டாளர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், முந்தைய நாள்களை ஒப்பிடுகையில் பங்குச்சந்தை இன்று பெரிய அளவில் மாற்றமில்லாமல் (சென்செக்ஸ் 100 புள்ளிகள் வித்தியாசத்தில்தான்) உள்ளது.

அமெரிக்காவில் எச்1பி விசா கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது பங்குச்சந்தையில் இந்த வார தொடக்கத்தில் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இன்றும் ஐடி பங்குகள் சரிவில் உள்ளன.

துறைகளில் உலோக குறியீடு 1%, தொலைத்தொடர்பு 0.5% உயர்ந்த நிலையில் ஆட்டோ குறியீடு 0.5% சரிந்தது. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் நிலையாக வர்த்தகமாகி வருகின்றன.

அதானி பவர், ஹிந்துஸ்தான் காப்பர், டாடா மோட்டார்ஸ், கார்டன் ரீச், பிஎஸ்இ லிமிடெட் ஆகியவை நிஃப்டியில் அதிக செயலாக்கத்தில் உள்ள பங்குகளாகும். ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி வங்கி பங்குகளும் லாபமடைந்து வருகின்றன.

டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், ஹெச்சிஎல் டெக், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன.

Stock Market : Nifty at 25,000, Sensex down 130 pts; auto, IT, realty down

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது! இன்றைய நிலவரம்!

சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 குறைந்துள்ளது.தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் காலை,... மேலும் பார்க்க

சிஎன்ஜி-யில் பேருந்துகள் : எக்கோ ஃப்யூயலுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

பொதுப் போக்குவரத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் தனது முயற்சியின் ஒரு பகுதியாக, டீசலில் இயங்கும் 850 பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றுவதற்கு மும்பையைச் சோ்ந்த எக்கோ ஃப்யூயல் சிஸ்டம் நிற... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு: பண்டிகைக் கால எழுச்சியை எதிா்பாா்க்கும் நிறுவனங்கள்

ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக நுகா்வோரின் உற்சாகம் வெகுவாக அதிகரிக்கும் என்பதால், இந்தப் பண்டிகைக் காலத்தில் பெரிய விற்பனை எழுச்சியை இந்தியாவின் வாகன, நுகா்பொருள், மின்னணு சாதனத் துறை நிறுவனங்கள் எதிா்... மேலும் பார்க்க

எச்-1பி விசா கட்டண உயர்வு எதிரொலி: ஐடி பங்குகள் சரிவு!

புதுதில்லி: எச்1பி விசா கட்டண உயர்வு ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டதை அடுத்து ஐடி துறை பங்குகள் தொடர்ந்து அழுத்தத்தில் இருந்தன. இது முதலீட்டாளர்களின் மனநிலையை தொடர்ந்து பாதித்த... மேலும் பார்க்க

ஓலா எலக்ட்ரிக் பங்குகள் 20% உயர்வு!

புதுதில்லி: ஏப்ரல் முதல் ஜூன் வரையான முதல் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் அதன் வருவாய் 35.5% உயர்ந்து ரூ.828 கோடியாக உள்ளதாக தெரிவித்ததையடுத்து, திங்கட்கிழமை ஓலா எலக்ட்ரிக் பங்குகள் கிட்டத... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 88.71 ஆக நிறைவு!

மும்பை: அதிக கட்டணங்கள் மற்றும் அதிபர் டிரம்ப் எச்1பி விசா மீதான கட்டணமாக 1 லட்சம் டாலரை அறிவித்த நிலையில், இந்திய ரூபாய் மதிப்பானது கடந்த சில நாட்களாக வெகுவாக வீழ்ச்சியடைந்து வரலாற்று குறைந்தபட்ச அளவ... மேலும் பார்க்க