செய்திகள் :

கருணாநிதி சமாதியில் கோவில் கோபுரம்: "சேகர் பாபு மன்னிப்பு கோர வேண்டும்" - நயினார் நாகேந்திரன்

post image

இன்று (ஏப்ரல் 17) சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறையின் மானிய கோரிக்கை நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

அப்போது, கருணாநிதியின் சமாதியின் மேல் பகுதியில், பூக்களால் ஶ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் போல அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இதற்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில்...

'சேகர்பாபு மன்னிப்பு கேட்க வேண்டும்' - நயினார் நாகேந்திரன்
'சேகர்பாபு மன்னிப்பு கேட்க வேண்டும்' - நயினார் நாகேந்திரன்

"மறைந்த திரு. கருணாநிதி அவர்களின் கல்லறை மீது, தமிழகத்தின் தனி அடையாளமான திருவில்லிபுத்தூர் கோவிலின் கோபுரத்தை வரைந்து வைத்திருக்கும் அறிவாலயம் அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது.

'பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி' என இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு இதுவரைக் கேவலப்படுத்தியது போதாதா?

சமாதியின் மீது கோவில் கோபுரங்களை வரைந்து இந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா?

அதுவும் இந்து அறநிலையத் துறை அமைச்சராகப் பதவியில் இருக்கும் திரு. சேகர்பாபு அவர்கள் இவ்வாறு இந்துக்களின் நம்பிக்கைகளைச் சீண்டிப்பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு அவர் உடனடியாகப் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

மேலும், அந்த பிரச்னைக்குரிய அலங்காரத்தையும் உடனடியாக நீக்கும்படி உத்தரவிட வேண்டுமென முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சம்பவத்திற்கு முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டிருப்பதாவது...

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

”திருமணமானதும் குழந்தை பிறக்காது” - பொன்முடியைத் தொடர்ந்து திமுக எம்பி கல்யாணசுந்தரம் சர்ச்சை பேச்சு

கும்பகோணம் தொகுதிக்கு உட்பட்ட, சேஷம்பாடி கிராமத்தில் 261 பேருக்கு, கலைஞரின் கனவு இல்லத்திற்கான வேலை தொடங்குவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், ராஜ்ய... மேலும் பார்க்க

`தப்பியதா... தள்ளிப்போனதா?’ ஊசலாட்டத்தில் பொன்முடியின் இலாகா!

வைணவ, சைவ சமயங்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக, அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்தச் சூழலில், அவரின் இலாகாவை மாற்றுவதற்கு ஆட்சி மேலிடம் ஆலோசித்த... மேலும் பார்க்க

`ரூட்டை மாற்றி..!’ - விருந்து வைத்து அழைக்கும் கார்த்தி சிதம்பரம் - தலைவர் பதவிக்கு `குறி’?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மீது பல்வேறு புகார்கள் கிளம்பின. இதையடுத்து அந்த பதவிக்குத் தீவிரமாகக் காய் நகர்த்தியவர்களில் கார்த்தி சிதம்பரமும் ஒருவர். அந்த நேரத்தில்தான், ... மேலும் பார்க்க

'லிக்யூட் ஆக்ஸிஜன் மீத்தேனை பயன்படுத்தி, 4000 கிலோ ராக்கெட் செலுத்தும் திட்டம்' - இஸ்ரோ தலைவர்

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாகர்கோவில் வந்திருந்த இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இஸ்ரோவில் 2025-ல் நிறைய சாதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஜனவரி 6-ம் தேதி ஆதித்தியா எல்... மேலும் பார்க்க