செய்திகள் :

கரூர் மாவட்ட கோயில்களின் சொத்து ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? விவரம் கேட்கும் உயர்நீதிமன்றம்

post image

கரூர் மாவட்ட கோயில்களின் சொத்து ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, அரசுத்தரப்பில் விவரம் கேட்டுள்ளது .

இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறை

சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், "கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமாணா கோயில், நெரூர் அக்னீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 64 கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளைச் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இந்தச் சொத்துகளை மீட்க உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

"கரூர் மாவட்ட கோயில்களுக்குச் சொந்தமான நிலம், ஆக்கிரமிப்புகளை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கைகளின் தற்போதைய நிலை குறித்தும், அதன் விவரங்களையும் அறநிலையத்துறையின் கமிஷனர், கரூர் மாவட்ட கலெக்டர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

கோயில் நிலத்தை மீட்க ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். 2015-ல் கமிஷனர் அனுப்பிய சுற்றறிக்கை மாயமானதைக் கண்டுபிடித்து தாக்கல் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 20 கோயில்களின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்று ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இந்த வழக்கு, கடந்த 30 ஆம் தேதி நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆகியோர் ஆஜராகி, "வருவாய்த்துறை, அறநிலையத்துறை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 10 கோயில்களின் சொத்து விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் அதில் கவனம் செலுத்தியதால் மீதமுள்ள 10 கோயில்களின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய ஆய்வு நடந்து வருவதால் அவகாசம் தேவை" என்று வாதிட்டனர்.

அவகாசம் அளித்த நீதிபதிகள், "கோயில் சொத்துகள் எப்படி பராமரிக்கப்படுகின்றன என்ற விவரத்தை நவம்பர் 25 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

பள்ளிக்கரணை : `சதுப்பு நிலத்தில் கட்டடம் கட்ட இடைக்கால தடை’ - உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட சிஎம்டிஏ அனுமதி அளித்துள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன.இதனையடுத்து, `சதுப... மேலும் பார்க்க

`கோவில் சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட அறநிலையத்துறை தயங்குவது ஏன்?’ - உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்கள், மடங்கள், கட்டளைகளுக்கு சொந்தமாக உள்ள சொத்துக்கள், நிதி மற்றும் நிலங்கள் தொடர்பான விவரங்கள், அறநிலையத்துறையின் உத்தரவுகள், அரசாணைகள், டெண்டர் அறிவிக்கைகளை உள்ளிட்ட அ... மேலும் பார்க்க

`உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி' - பி.ஆர்.கவாய் பரிந்துரை; `சூர்ய காந்த்' பின்னணி என்ன?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தனது பதவிக்காலம் முடிந்ததும் அடுத்த தலைமை நீதிபதியாக இருக்க நீதிபதி சூர்யா காந்தை தேர்வு செய்துள்ளார். வரும் நவம்பர் 24ம் தேதி சூர்யா காந்த் தலைமை நீதிபதியாக பதவி ஏற்... மேலும் பார்க்க

CJI கவாய் மீது காலணி வீசிய வழக்கு: ராகேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த நீதிமன்றம் - ஏன்?

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் காலணி வீசி தாக்குதல் நடத்தமுயன்ற வழக்கில், வழக்கறிஞருக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் விரும்பவி... மேலும் பார்க்க

கரூர் : வாபஸ் பெறுவதாக கூறிய ஆனந்த்; அனுமதி அளித்து தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் - நடந்தது என்ன?

கரூரில், கடந்த செப்டம்பர் 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்... மேலும் பார்க்க

சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணைக்கு தடை! - இடைக்கால உத்தரவில் உயர் நீதிமன்ற கிளை தெரிவித்தது என்ன?

தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், கிராமப்பெயர்களில் உள்ள சாதியப் பெயர்களை நீக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது பரபரப்ப... மேலும் பார்க்க