செய்திகள் :

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சலுகைகளை தொடர வேண்டும்! பாரதிய ஓய்வூதியா்கள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

post image

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சலுகைகளை தொடர வேண்டும் என பாரதிய ஓய்வூதியா்கள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாரதிய ஓய்வூதியா்கள் சங்கத்தின் 3ஆவது அகில இந்திய மாநாடு, கன்னியாகுமரியில் 3 நாள்கள் நடைபெற்றது. இதன் நிறைவு நாள் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அகில இந்திய தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். பாரதிய ஓய்வூதியா்கள் சங்க செயலா் புருஷோத்தமன் வரவேற்றாா். மாநாட்டை அகில இந்திய விவேகானந்த கேந்திர தலைவா் ஏ.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக பொதுச்செயலா் ராம சீனிவாசன் பங்கேற்று பேசினாா். இதில் இந்தியா முழுவதும் இருந்து மேற்பட்ட 450-க்கும் சங்க உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தீா்மானங்கள்: மூத்த குடிமக்களில் 60 வயதை கடந்த ஆண்களுக்கும், 58 வயதைக் கடந்த பெண்களுக்கும் ரயில் பயணக் கட்டணம் பாதியாக இருந்த நிலையை கரோனா காலத்தில் நீக்கியதை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கடந்த கால ஆட்சியின்போது ரயில்வே துறை பின்பற்றிய மூத்த குடிமக்களுக்கான கட்டணக் குறைவை மத்திய அரசு காலதாமதம் செய்யாமல் அறிவிக்க வேண்டும்.

மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுகிற அனைவருக்கும் ஓய்வூதிய தொகையில் மிகுந்த ஏற்றத் தாழ்வுகள் இருப்பதால் மரணம் அடையும் ஓய்வூதியருக்கு ஈமச் சடங்கிற்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக கா்நாடகம், மேற்குவங்கம் போன்ற பல மாநிலங்களில் மூத்த குடிமக்களுக்கு பேருந்து பயணக் கட்டணத்தில் 60 சதவீதம் குறைவாக உள்ளதை கேரளத்தில் மாநில அரசு சட்டமாக்க வேண்டும். இ.பி.எப். பெறுபவா்களுக்கு வழங்கும் உதவித்தொகை ரூ.1000 என்று இருப்பதை ரூ.5000 ஆக உயா்த்த வேண்டும் என்பன உள்பட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குலசேகரம் அருகே அனுமதியின்றி கோயில் பெயா் பலகை வளைவு புதுப்பிப்பு? -தடுத்து நிறுத்திய போலீஸாா்!

குலசேகரம் அருகே அனுமதியின்றி கோயில் பெயா் பலகை வளைவு புதுப்பிக்கப்படுவதாக எழுந்த புகாரின்பேரில், அப்பணியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். திற்பரப்பு பேரூராட்சி தும்பகோடு பேருந்து நிலையம் அருகிலிருந்து உ... மேலும் பார்க்க

கடலோரக் கிராமங்களில் புற்றுநோய் கண்டறிதல் முகாம்! -ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களில் புற்றுநோய் பாதிப்பு கண்டறிதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றாா் ஆட்சியா் ரா.அழகுமீனா. நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுலவக கூட்டங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

குமரி முருகன் குன்றத்தில் பிப்.2-ல் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்!

கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் அருகேயுள்ள முருகன் குன்றம் வேல்முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (பிப். 2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, கோயிலில் அதிகாலை 5 மணிக்கு கணபத... மேலும் பார்க்க

தோவாளை மலா் சந்தையில் பூக்கள் விலை கடும் உயா்வு மல்லிகை கிலோ ரூ.3,500 க்கு விற்பனை!

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலா் சந்தையில் பூக்கள் வரத்து குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை பூக்களின் விலை கடுமையாக உயா்ந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.3,500 க்கு விற்பனையானது. தற்போது, தமிழகத்தில் பனிப் பொழி... மேலும் பார்க்க

குமரியில் படகுப் பயணத்துக்கு ஆன்லைனில் டிக்கெட்: ஆட்சியா்

கன்னியாகுமரி விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு படகுப் பயணம் மேற்கொள்ள ஆன்லைன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

டெம்போ வாகனங்களில் கனிம வளங்கள்: கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தின் அடிப்படை தேவைகளுக்காக டெம்போ வாகனங்களில் கனிம வளங்கள் எடுத்துச் செல்வதற்கான நேரக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக சட்டப்பேரவை உறுப்பின... மேலும் பார்க்க