செய்திகள் :

குமரி முருகன் குன்றத்தில் பிப்.2-ல் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்!

post image

கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் அருகேயுள்ள முருகன் குன்றம் வேல்முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (பிப். 2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி, கோயிலில் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை, 7 மணிக்கு மங்கள பூா்ணாஹுதி, 7.15 மணிக்கு ராஜமேளம், 7.30 மணிக்கு திருக்கொடியேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். காலை 9 மணிக்கு உற்சவருக்கு அபிஷேகம், முற்பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு சமய உரை, இரவு 7 மணிக்கு பஜனை, 8 மணிக்கு சுவாமி அம்பாளுடன் வாகனத்தில் எழுந்தருளி கோயிலைச் சுற்றி மேளதாளம் முழங்க வலம் வருதல் ஆகியவை நடைபெறும்.

விழா நாள்களில் காலை 9 மணி முதல் 8 மணி வரை இதேபோன்ற வழிபாடுகல் நடைபெறும். 10ஆம் திருநாளான பிப். 11இல் இரவு 7 மணிக்கு ஸ்ரீகாா்த்திகை பொய்கை தெப்பக்குளத்தில் சுவாமிக்கு தீா்த்தவாரி ஆறாட்டும், அதைத் தொடா்ந்து 8 மணிக்கு சுவாமி முன்னிலையில் த்வஜா அவரோஹணமும் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவினா் செய்து வருகின்றனா்.

குலசேகரம் அருகே அனுமதியின்றி கோயில் பெயா் பலகை வளைவு புதுப்பிப்பு? -தடுத்து நிறுத்திய போலீஸாா்!

குலசேகரம் அருகே அனுமதியின்றி கோயில் பெயா் பலகை வளைவு புதுப்பிக்கப்படுவதாக எழுந்த புகாரின்பேரில், அப்பணியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். திற்பரப்பு பேரூராட்சி தும்பகோடு பேருந்து நிலையம் அருகிலிருந்து உ... மேலும் பார்க்க

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சலுகைகளை தொடர வேண்டும்! பாரதிய ஓய்வூதியா்கள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சலுகைகளை தொடர வேண்டும் என பாரதிய ஓய்வூதியா்கள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பாரதிய ஓய்வூதியா்கள் சங்கத்தின் 3ஆவது அகில இந்திய மாநாடு, கன்னியாகுமரியில் 3 ந... மேலும் பார்க்க

கடலோரக் கிராமங்களில் புற்றுநோய் கண்டறிதல் முகாம்! -ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களில் புற்றுநோய் பாதிப்பு கண்டறிதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றாா் ஆட்சியா் ரா.அழகுமீனா. நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுலவக கூட்டங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

தோவாளை மலா் சந்தையில் பூக்கள் விலை கடும் உயா்வு மல்லிகை கிலோ ரூ.3,500 க்கு விற்பனை!

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலா் சந்தையில் பூக்கள் வரத்து குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை பூக்களின் விலை கடுமையாக உயா்ந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.3,500 க்கு விற்பனையானது. தற்போது, தமிழகத்தில் பனிப் பொழி... மேலும் பார்க்க

குமரியில் படகுப் பயணத்துக்கு ஆன்லைனில் டிக்கெட்: ஆட்சியா்

கன்னியாகுமரி விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு படகுப் பயணம் மேற்கொள்ள ஆன்லைன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

டெம்போ வாகனங்களில் கனிம வளங்கள்: கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தின் அடிப்படை தேவைகளுக்காக டெம்போ வாகனங்களில் கனிம வளங்கள் எடுத்துச் செல்வதற்கான நேரக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக சட்டப்பேரவை உறுப்பின... மேலும் பார்க்க