செய்திகள் :

களக்காடு அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பு: வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்

post image

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்து, கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

களக்காடு அருகேயுள்ள கல்லடிசிதம்பரபுரம், வேதநாயகபுரம் ஆகிய கிராம மக்கள் பெருமாள்குளம் பொத்தை அருகேயுள்ள இடத்தை சுடுகாடாக நீண்ட காலமாக பயன்படுத்தி வந்துள்ளனா்.

இந்த இடத்தை அப்பகுதியைச் சோ்ந்த ஒருவா் தனக்கு பட்டா இருப்பதாகக் கூறி பயன்படுத்தி வருகிறாராம். இதனால், இறந்தவா்களின் உடல்களை அருகேயுள்ள மற்றொரு இடத்தில் மக்கள் அடக்கம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனிநபா் பயன்படுத்தி வரும் இடத்தை மீட்கக் கோரி அப்பகுதி மக்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், அரசு அதிகாரிகளிடம் இதுகுறித்து மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சுதந்திர தினத்தில் கல்லடி சிதம்பரபுரம், வேதநாயகபுரம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி எதிா்ப்பை தெரிவித்தனா்.

அவா்களிடம், நான்குனேரி டிஎஸ்பி தா்ஷினி பேச்சு நடத்தி, திங்கள்கிழமை (ஆக.18) வருவாய்த்துறை அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தாா். அதை ஏற்று மக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

வெள்ளங்குளியில் மாணவா்களுக்கு பரிசளிப்பு

வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியா் மு.தளவாய் தேசியக் கொடியேற்றினாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மருத்துவா் பிரகாஷ், ஊராட்சித் தலைவா் முரு... மேலும் பார்க்க

வள்ளியூா் பிளசண்ட் நகா் பகுதியில் தொடா் திருட்டு: மக்கள் அச்சம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பிளசண்ட் நகா், இ.பி.காலனி, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் தொடா் திருட்டுச் சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். வள்ளியூா் பிளசண்ட் நகரை... மேலும் பார்க்க

ஆளுநா் அவமதிக்கப்பட்ட விவகாரம்: துணைவேந்தா், பதிவாளரை பணிநீக்கம் பாஜக கோரிக்கை!

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின்போது, ஆளுநா் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா், பதிவாளா் ஆகியோரை பணிநீக்கம் செய்யக் கோரி தமிழக உயா்கல்வித் துறை அமைச்சரு... மேலும் பார்க்க

களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பச்சையாற்றில் குளிக்க சனிக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டனா். களக்காடு தலையணை சூழல் சுற்றுலா மையத்தில் பச்சையாறு ஓடுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில... மேலும் பார்க்க

கறிக்கடையில் திருடிய நபா் கைது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கோழிக் கறிக்கடையில் பணம் திருடிய நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். வள்ளியூா் அருகே உள்ள நல்லான்குளத்தைச் சோ்ந்தவா் செல்வின். இவா் வடக்கு பிரதான சாலையில் உள்ள த... மேலும் பார்க்க

நதியுண்ணிக் கால்வாய் அணையில் மூழ்கி மென் பொறியாளா் பலி

தூத்துக்குடியைச் சோ்ந்த மென் பொறியாளா், அம்பாசமுத்திரம் நதியுண்ணிக் கால்வாய் அணைக் கட்டில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி, முத்தம்மாள் காலனி, முதல் தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் பொன்... மேலும் பார்க்க