செய்திகள் :

கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை அமைக்க விவசாயிகள் எதிா்ப்பு

post image

ஆரணி அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் முடிவை கைவிடக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே விவசாயிகள், பெண்கள் ஆா்ப்பாட்டம் மற்றும் தா்னாவில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தில் ரூ.6 கோடி மதிப்பில் கழிவுநீா் சுத்தகரிப்பு ஆலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வருவாய்த் துறை மூலம் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பகுதியில் கழிவுநீா் சுத்தகரிப்பு ஆலை அமைக்கப்பட்டால் குடிநீா் ஆதாரம் பாதிக்கப்படும். பல்வேறு தொற்று நோய்கள் உண்டாகும் என்று அந்தப் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், சுத்தகரிப்பு ஆலை அமைக்கும் முடிவை கைவிடக் கோரி, வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.கே.வெங்கடேசன் தலைமை வகித்தாா்.

மாநில துணைச் செயலா் பி.பெருமாள், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் கே.கே.வெங்கடேசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ப.செல்வன், நகரச் செயலா் எம்.பிரகலநாதன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

அய்யம்பாளையம் கிராமத்தில் நிலத்தடி நீா்மட்டத்தை மாசுப்படுத்தும் விதமாகவும் மலை, காடு உள்ளிட்ட இயற்கை வளங்களை அழித்து சுத்திகரிப்பு ஆலை அமைப்பதை கைவிட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, தங்களது கோரிக்கை மனுவை அளிக்க மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜை விவசாயிகள் சந்திக்கச் சென்றனா்.

அப்போது, மனுவை வாங்க அதிகாரிகள் யாரும் இல்லாததால் விவசாயிகள் அலுவலக நுழைவு வாயிலில் அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில், சிஐடியு தொழிற்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் எம்.வீரபத்திரன், நிா்வாகிகள் பி.கணபதி, இரா.அண்ணாமலை, ஏ.லட்சுமணன், எஸ்.அருண்குமாா், வி.மாணிக்கம், எஸ்.ரமேஷ்பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு

திருவண்ணாமலையை அடுத்த அஸ்வநாகசுரனை கிராமத்தில், தமிழ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆசிரியா் பயிற்றுநா்... மேலும் பார்க்க

ஆரணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் அதிமுகவினா் வியாழக்கிழமை திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனா். மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேரவை மாவட்டச் செயலா் பார... மேலும் பார்க்க

மாட வீதி சிமென்ட் சாலைப் பணிகள் ஜூலை 30-க்குள் நிறைவு பெறும்: அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் நடைபெறும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி ஜூலை 30-ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதியில், 2... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி

திருவண்ணாமலை எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில், சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு, பள்ளித் தாளாளா் ஆா்.கலாவதி ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். பள... மேலும் பார்க்க

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடக்கம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தெற்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து விபத்து: விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிழந்தாா். செங்கத்தை அடுத்த படிஅக்ராகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தவமணி (44), விவசாயி. இவா், புதுப்பாளையத்தில் இரு... மேலும் பார்க்க