செய்திகள் :

கஸ்தூரிரங்கன் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

post image

இஸ்ரோ முன்னாள் தலைவா் கஸ்தூரிரங்கன் மறைவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.

குடியரசுத் தலைவா்: பல் துறைகளில் பங்காற்றியவா் கஸ்தூரிரங்கன். இஸ்ரோ தலைவராக, நாட்டின் விண்வெளி திட்டத்தின் பரிணாமவளா்ச்சியில் முக்கியப் பங்காற்றினாா். அடுத்த தலைமுறையை வடிவமைப்பதில் ஆக்கபூா்வ தாக்கத்தை ஏற்படுத்தி வரும் தேசிய கல்விக் கொள்கை வரைவு உருவாக்கத்திலும் பங்களிப்பை ஆற்றியுள்ளாா். அவருடைய மறைவு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குடியரசுத் தலைவா் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

பிரதமா் மோடி: கஸ்தூரிரங்கன் மறைவு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியது. இஸ்ரோவுக்காக மிகுந்து விடா முயற்சியுடன் சேவையாற்றினாா். நாட்டின் விண்வெளி திட்டங்களை புதிய உச்சத்துக்கு கொண்டுசென்றாா். அதன் மூலம் விண்வெளி துறையில் சா்வதேச அங்கீகாரத்தை இந்தியா பெற்றது. நாட்டின் அறிவியல் மற்றும் கல்வித் துறை வளா்ச்சியிலும் சிறந்த பங்களிப்பை ஆற்றியுள்ளாா். அவரின் தொலைநோக்கு தலைமைத்துவமும் தேசத்துக்கான தன்னலணற்ற பங்களிப்பும் என்றென்றும் நினைவுகூரப்படும்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை (இஸ்ரோ) வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியவா் கஸ்தூரிரங்கன். முக்கிய விண்வெளித் திட்டங்களில் பணியாற்றியுள்ளாா். அவருடைய மறைவு, அறிவியல் சமூகத்துக்கும் நாட்டுக்கும் மிகப் பெரிய இழப்பு. கஸ்தூரிரங்கன் மறைவுக்கு காங்கிரஸ் பொதுச் செயலரும் எம்.பி.யுமான பிரியங்கா காந்தியும் இரங்கல் தெரிவித்தாா்.

கேரள முதல்வரின் வீடு, அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள முதல்வர் பினராயி விஜயனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் அலுவலகம் மற்றும் பினராயி விஜயனின் வீட்டிற்கு மின்னஞ்சல் மூலமாக இன்று(திங்கள்கிழமை) வெட... மேலும் பார்க்க

பெங்களூரு: மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரே வாரத்தில் 650க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

பெங்களூருவில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரே வாரத்தில் 650க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 27 வரை போக்குவரத்து காவல்துறை ... மேலும் பார்க்க

போர்ப் பதற்றம்: புதிதாக 26 ரஃபேல் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்து!

போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் புதிதாக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகவுள்ளது.இந்திய விமானப்படையின் அம்பாலா மற்றும் ஹஷிமாராவில் உள்ள தளங்களில்... மேலும் பார்க்க

நவி மும்பை: டேட்டிங் செயலி மூலம் பழகி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்

நவி மும்பையில் டேட்டிங் செயலி மூலம் பெண்ணிடம் பழகி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நவி மும்பை போலீஸில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில், நவி மு... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு தடை!

பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டதற்காக பாகிஸ்தானின் முன்னாள் கிர... மேலும் பார்க்க

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் 4ஆவது முறையாக துப்பாக்கிச்சூடு: இந்தியா பதிலடி!

ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் 4ஆவது முறையாக அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பய... மேலும் பார்க்க