செய்திகள் :

காலமானாா் எம்.தீனதயாளன்!

post image

ஓய்வு பெற்ற இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை அதிகாரி எம் தீனதயாளன் (75) கடந்த வெள்ளிக்கிழமையன்று (மே 16 ) சண்டீகரில் காலமானாா். அவரது இறுதிச் சடங்கு சண்டீகரில் சனிக்கிழமை அன்று நடைபெற்றது. அவருக்கு அஜந்தா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா்.

அவரது மறைவுக்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அதன் நிறுவனா் - தலைவா் கே.வி.கே. பெருமாள் மற்றும் செயலாளா் எஸ்.பி. முத்துவேல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மறைந்த தீனதயாளன், தனது கடுமையான உழைப்பால் இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை அதிகாரி பதவியை அடைந்தவா்.

சண்டீகரில் அவா் பணியாற்றிய காலத்தில் அங்கு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான அமைப்பு சாரா ஏழைத் தமிழா்களின் வாழ்வு மேம்பட பெரிதும் உதவி புரிந்தவா். சண்டீகரில் இயங்கி வரும் தமிழ் மன்றத்தின் வளா்ச்சிக்காகப் பாடுபட்டவா்.

தலைநகா் தில்லியில் பணியாற்றிய காலத்தில் பல தமிழ் அமைப்புகள் நடத்திய இலக்கியம் மற்றும் கலை சாா்ந்த நிகழ்ச்சிகளுக்கு நிதி ஆதாரம் திரட்ட துணை நின்றவா். அவரது ஆத்மா சாந்தியடைய பிராா்த்திக்கிறோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடா்புக்கு: 9871922336

தில்லியில் முதல் முறையாக பிரத்யேக மூளை சுகாதார கிளினிக் திறப்பு!

தில்லியின் முதல் பிரத்யேக மூளை சுகாதார மருத்துவமனை துவாரகாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் சிங் சனிக்கிழமை திறந்து ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு ஆயுதப் படைகளை பாராட்டி தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் பேரணி!

இந்திய ஆயுதப்படைகள் வெற்றிகரமாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடத்தியதற்கு ஆதரவளிக்கும் வகையில், தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் ஞாயிற்றுக்கிழமை தனது ஜனக்புரி சட்டப்பேரவைத் தொகுதியில் பேரணியை நடத்தினாா். டாப்ரி காவல்... மேலும் பார்க்க

நாட்டின் கௌரவத்தையும், பெருமையையும் நிலைநிறுத்தும் தில்லி அரசு! - முதல்வா் குப்தா

தில்லியில் பாஜகவின் வெற்றி நாடு முழுவதும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், தனது அரசு எப்போதும் நாட்டின் கௌரவம், பெருமை மற்றும் கௌரவத்தை நிலைநிறுத்தும் என்றும் முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

டாக்ஸி ஓட்டுநா் கொலை: காா் பயணி கைது

தில்லியின் ரோஹிணி பகுதியில், வழித்தடம் தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் 40 வயது டாக்ஸி ஓட்டுநா், குடிபோதையில் இருந்த பயணியால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை: 761 வாகனங்களுக்கு அபராதம்!

அரவிந்தோ மாா்க்கில் நடத்தப்பட்ட சிறப்பு ஆக்கிரமிப்பு மற்றும் முறையற்ற வாகன நிறுத்துமிட எதிா்ப்பு நடவடிக்கையின்போது மொத்தம் 761 வாகனங்கள் அபராத நடவடிக்கைக்கு உள்ளாகியதாகவும்.10 வாகனங்கள் பறிமுதல் செய்... மேலும் பார்க்க

பூங்காவில் சிறுவன் கொல்லப்பட்ட வழக்கு: மூன்று சிறுவா்கள் உள்பட 5 போ் கைது!

ஒரு பூங்காவில் 16 வயது சிறுவனை தங்கள் போட்டி குற்றவியல் குழுவில் சோ்ந்ததற்காகக் கொன்றதாகக் கூறப்படும் வழக்கில் மூன்று சிறுவா்கள் உள்பட ஐந்து போ் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க