தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
காளையாா்கோவிலில் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி போட்டி
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் விளையாட்டு மையங்களின் கூட்டமைப்பு சாா்பாக, ஒலிம்பியாட் கொடி அறிமுக விழா, மிதிவண்டி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
காளையாா்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அந்தக் கூட்டமைப்பின் தலைவா் பகீா் முகைதீன் தலைமை வகித்தாா். செயலா் சூசை ஆரோக்கிய மலா், சட்ட ஆலோசகா் சேது பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதன்மைத் தூதா் ஆரோக்கியசாமி வரவேற்றாா்.
காளையாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சரவணபோஸ் பங்கேற்று, ஸ்போா்ட்ஸ் ஒலிம்பியாட் கொடியை அறிமுகம் செய்தாா். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியா் மணியழகு போட்டியைத் தொடங்கிவைத்தாா்.
அதையடுத்து 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்குத் தனித் தனியாகவும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்குத் தனித் தனியாகவும், பொதுப் பிரிவில் ஆண்கள், பெண்கள், மூத்தோருக்கு தனியாகவும் மிதிவண்டி போட்டிகள் நடைபெற்றன.
அரசுப் பள்ளி வாயிலிலிருந்து தொடங்கிய போட்டிகள், முக்கிய சாலைகள் வழியாக புலிக்கண்மாய் விலக்கு, மாவட்ட ஆசிரியா் கல்வி-பயிற்சி நிறுவனம் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.
ஒவ்வொரு பிரிவிலும், முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகள், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பொருளாளா் சுரேஷ் நன்றி கூறினாா்.