செய்திகள் :

காஷ்மீர் தாக்குதலில் எங்களுக்கு தொடர்பு இல்லை: பாகிஸ்தான்

post image

காஷ்மீர் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தான் எந்த சூழலிலும் பயங்கரவாதத்தை ஆதரிக்காது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் பயங்கரவாதிகளால் செவ்வாய்க்கிழமை 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு ’லஷ்கர்-ஏ-தொய்பா’ பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ’தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பொறுப்பேற்றுள்ளது.

இந்த நிலையில், தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறியதாவது:

”மக்கள் தங்கள் உரிமைகளை கேட்கிறார்கள். இந்துத்துவ சக்திகள் மக்களை சுரண்டி வருகின்றன. சிறுபான்மையினரை அடக்குகிறார்கள். கிறிஸ்தவர்கள், பெளத்தர்கள் சுரண்டப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். அதனால்தான் இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

இந்த சம்பவத்தில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. எந்த சூழலிலும் நாங்கள் எங்கும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. மேலும், எந்த மோதலிலும் அப்பாவி மக்கள் இலக்காகக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

பயங்கரவாதிகள் அல்லாதவர்களை குறிவைப்பதை எங்களின் தேசியக் கொள்கை அனுமதிக்காது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், உரிமைகளைக் கேட்கும் இந்தியர்களுக்கு எதிராக ராணுவம் அல்லது காவல்துறை அட்டூழியம் செய்கிறது. அடிப்படை உரிமைகூட இல்லை. அவர்கள் ஆயுதம் ஏந்தினால், பாகிஸ்தானை எளிதில் குறை கூறுகிறார்கள்.

பாகிஸ்தானுக்குள் அமைதியின்மையை ஏற்படுத்த இந்தியா உடந்தையாக இருப்பதை பல சந்தர்ப்பங்களில் ஆதாரத்துடன் நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : மோடியிடம் சொல்! கணவரைக் கொன்ற பயங்கரவாதிகள் சொல்லியனுப்பிய செய்தி!

ஜம்மு-காஷ்மீர்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!

ஜம்மு-காஷ்ரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதல் உயிரிழந்தோருக்கு அந்த மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா நிவாரணம் அறிவித்துள்ளார். பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸுக்கு ஏப். 26-ல் இறுதிச் சடங்கு

கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை (ஏப். 26) நடைபெறவுள்ளது. 266-ஆவது போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ் (88), வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் பொதுத் தோ்தல்

ஆஸ்திரோலியாவில் பொதுத் தோ்தலுக்கான முன்கூட்டிய வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. போப் பிரான்சிஸ் மறைவைத் தொடா்ந்து பல்வேறு தோ்தல் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் வழக்கமான பரபரப்பு இல்லாமல்... மேலும் பார்க்க

ஹிந்து தலைவா் கொலை: இந்தியாவின் குற்றச்சாட்டை நிராகரித்தது வங்கதேசம்

வங்கதேசத்தில் ஹிந்து மத தலைவா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக இந்தியா முன்வைத்த குற்றச்சாட்டை வங்கதேசம் நிராகரித்தது. வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசினாவுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்து அ... மேலும் பார்க்க

புதிய காஸா போா் நிறுத்த திட்டம் முன்வைப்பு: ஹமாஸ்

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான புதிய செயல்திட்டத்தை கத்தாா் மற்றும் எகிப்து மத்தியஸ்தா்கள் முன்வைத்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், புதிய... மேலும் பார்க்க

‘உக்ரைனுடன் நேரடி பேச்சுவாா்த்தைக்கு புதின் தயாா்’

உக்ரைனில் போா் நிறுத்தம் மேற்கொள்வது குறித்து அந்த நாட்டுடன் நேரடி பேச்சுவாா்த்தையில் ஈடுபட ரஷிய அதிபா் தயாராக இருப்பதாக அவரின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறியுள்ளாா். இது குறித்து செய்திய... மேலும் பார்க்க