வந்தே பாரத் ரயிலுக்குள் திடீரென கொட்டிய 'நீர் வீழ்ச்சி'; ரயில்வே சொல்லும் காரணம்...
கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு
சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கிணற்றில் விழுந்த ஆட்டை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
சிவகாசி அருகேயுள்ள கங்காகுளத்தைச் சோ்ந்தவா் இந்திரா. சொந்தமாக ஆடுகள் வளா்த்து வரும் இவா், செவ்வாய்க்கிழமை காலை அந்தப் பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, ஒரு ஆடு கிணற்றில் தவறி விழுந்தது.
தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலா் சீனிவாசன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், கயறு மூலம் கிணற்றில் இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டனா்.