செய்திகள் :

கிரீன்லாந்து மக்களிடம் மன்னிப்பு கேட்கும் டென்மார்க் பிரதமர்! என்ன காரணம்?

post image

டென்மார்க் அரசின் தன்னாட்சி பகுதியான கிரீன்லாந்தின் இனுயிட் மக்களிடம் மன்னிப்பு கேட்க, டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் தலைநகர் நூக்கிற்கு சென்றுள்ளார்.

கிரீன்லாந்தின் பூர்வீக மக்களான இனுயிட் பழங்குடியினருக்கு எதிராக, டென்மார்க் அரசு கடந்த 1960 முதல் 1992 ஆம் ஆண்டு வரை கட்டாய கருத்தடை திட்டங்களை நடத்தி வந்தது.

இனுயிட் பழங்குடியினரின் மக்கள் தொகையைக் குறைக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்தத் திட்டங்களினால், 30 ஆண்டுகளில் சுமார் 4,500 இனுயிட் பெண்களின் கருப்பைக்குள் கருத்தடை சுருள் உள்ளிட்டவை கட்டாயப்படுத்தி பொருத்தப்பட்டன.

இதனால், பெரும்பாலான பெண்கள் நிரந்தரமாகவே குழந்தைகள் பெறும் தன்மையை இழந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. இத்துடன், இனுயிட் பெற்றோரிடம் இருந்து அவர்களது குழந்தைகள் வலுக்கட்டாயமாக டென்மார்க் அதிகாரிகளால் பறிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் இனுயிட் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்டார். மேலும், தங்கள் மீது திணிக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு இழப்பீடு கோரி டென்மார்க் அரசுக்கு எதிராக சுமார் 150 இனுயிட் மக்கள் ஒன்றிணைந்து வழக்குத் தொடர்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த செப்.22 ஆம் தேதியன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார். இத்துடன், டென்மார்க் தலைநகர் நூக்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் இன்று (செப். 24) இனுயிட் மக்களிடம் நேரடியாக மன்னிப்பு கேட்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த விவகாரத்தில் இனுயிட் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என டென்மார்க்கின் முன்னாள் பிரதமர்கள் கூறி வந்தனர். ஆனால், பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் பொதுவெளியில் மன்னிப்பு கேட்பது டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து இடையிலான உறவுகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், டென்மார்க்கின் தன்னாட்சி பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்கா கைபற்ற வேண்டுமென அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறிவருவதால் ஏற்பட்டுள்ள அழுத்ததினால் மட்டுமே அவர் மன்னிப்பு கேட்பதாக பலரும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: புதினைத் தடுக்காவிட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கும் போர் விரிவடையும்: உக்ரைன் அதிபர்

Danish Prime Minister Mette Frederiksen has traveled to the capital, Nuuk, to apologize to the Inuit people of Greenland, an autonomous region of the Danish government.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய யேமனின் ட்ரோன்கள்! 20 பேர் படுகாயம்!

இஸ்ரேலின் எயிலாட் நகரத்தின் மீது யேமனில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் நடத்திய தாக்குதல்களில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கடந்து எயிலாட் நகரத்தின் மீது இன்று (செப்.... மேலும் பார்க்க

புதினைத் தடுக்காவிட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கும் போர் விரிவடையும்: உக்ரைன் அதிபர்

ரஷியாவைத் தடுத்து நிறுத்த ஐ. நா. நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கும் போர் விரிவடையும் என்று உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை... மேலும் பார்க்க

ரஷியாவிலுள்ள ஆயிரக்கணக்கான உக்ரைன் குழந்தைகளை எப்போது மீட்கப் போகிறோம்? -ஸெலென்ஸ்கி

உக்ரைனிலிருந்து ரஷிய படைகளால் நாடு கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளை எப்போது மீட்கப் போகிறோம்? என்று உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி வினவியுள்ளார்.இது குறித்து நியூயாா்க் நகரில் நடைபெறும் ஐ.நா... மேலும் பார்க்க

பப்ஜியால் நேர்ந்த கொடூரம்! குடும்பத்தினர் 4 பேரைக் கொன்ற சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறை!

பாகிஸ்தானில், கடந்த 2022 ஆம் ஆண்டு பப்ஜி மோகத்தினால் தாய் உள்பட குடும்பத்தினர் 4 பேரைச் சுட்டுக்கொன்ற சிறுவனுக்கு, இன்று (செப். 24) 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லாகூரின் கஹ்னா பகுதி... மேலும் பார்க்க

அதிபர் டிரம்ப்பை சந்திக்க வாஷிங்டன் செல்கிறார் பாக். பிரதமர்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் வாஷிங்டன் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க, பாகிஸ்தான் பிரதமர் ஷ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல்! பெட்டிகள் தடம் புரண்டதில் 12 பேர் படுகாயம்!

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதலில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்தில் இருந்து பலூசிஸ்தான் தலைநகர் குவேட்டவை நோக்கி, 270 பயணிகளுடன் ஜாஃபர்... மேலும் பார்க்க