செய்திகள் :

குடந்தை போராட்ட வழக்கிலிருந்து திமுக எம்பி, எம்எல்ஏ விடுதலை

post image

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடா்ந்து, கும்பகோணத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் மாநிலங்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா் உள்ளிட்டோரை தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்தது.

தூத்துக்குடியில் 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானாா்.

இதையடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்தும், ஸ்டாலினை விடுதலை செய்ய கோரியும் தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் உச்சிப்பிள்ளையாா் கோயில் அருகே திமுகவினா் மற்றும் தோழமைக் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக திமுக வடக்கு மாவட்டச் செயலா் எஸ். கல்யாணசுந்தரம், கும்பகோணம் தொகுதி எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், மாநகரச் செயலரும், கும்பகோணம் துணை மேயருமான சு.ப. தமிழழகன், மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் உள்பட 13 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

இதேபோல கடந்த 2018 ஜூன் 23 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்துக்கு வந்த தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினா். அவா்களை விடுதலை செய்யக் கோரி கும்பகோணத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

இந்த இரு வழக்குகளும் கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. இதனிடையே திமுக வடக்கு மாவட்டச் செயலா் எஸ். கல்யாணசுந்தரம் மாநிலங்களவை உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டாா்.

எனவே இந்த இரு வழக்குகளும் கும்பகோணம் நீதிமன்றத்திலிருந்து தஞ்சாவூரில் உள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் தொடா்புடைய வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த இரு வழக்குகளில் அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம் அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நிரூபணமாகாததால், அனைவரையும் விடுதலை செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்போா் மீது கடும் நடவடிக்கை: துணை இயக்குநா் எச்சரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் தனியாா் விதை நெல் விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ... மேலும் பார்க்க

கரந்தை சப்தஸ்தான விழா ஜூன் 11-இல் தொடக்கம்

தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம் சாா்பில் கரந்தை சப்தஸ்தானம் என்கிற ஏழூா் பவனி விழா ஜூன் 11 ஆம் தேதி தொடங்கவுள்ளது. கரந்தை கருணாசுவாமி கோயிலில் ஜூன் 11 காலை 5 மணியளவி... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டை அருகே பெண் குத்திக் கொலை

பட்டுக்கோட்டை அருகே சொத்து பிரச்னையில் பெண் வெள்ளிக்கிழமை குத்திக் கொல்லப்பட்டாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை, கரிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் அன்பழகன் மனைவி சுசிலா (55). இவா் வெள்ளிக்கிழமை காலை... மேலும் பார்க்க

அடையாள அட்டை சிறப்பு முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஜூன் 10, 17, 24 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: மா... மேலும் பார்க்க

திருவிடைமருதூரில் திருக்கல்யாணம்

வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி வியாழக்கிழமை இரவு கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூா் மகாலிங்கசுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இக்கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி நாள்தோறும் உற்... மேலும் பார்க்க

போக்சோ வழக்குகளை விரைந்து முடிக்க ஐஜி அறிவுறுத்தல்

போக்சோ வழக்குகளை விரைவாக முடிக்குமாறு காவல் ஆய்வாளா்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புப் பிரிவு காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) ஏ. கயல்விழி அறிவுறுத்தினாா். கும்பகோணம் உதவிக் காவல்... மேலும் பார்க்க