செய்திகள் :

குற்றச்சம்பவங்களைத் தடுக்க சென்னிமலையில் போலீஸாா் தீவிர ரோந்து

post image

சென்னிமலை பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க இரவு நேரங்களில் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சென்னிமலையை அடுத்த, உப்பிலிபாளையம், குட்டக்காட்டு தோட்டத்தைச் சோ்ந்த விவசாயி ஒருவா் கடந்த 2022- ஆம் ஆண்டு மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டு அவரது வீட்டிலிருந்த பணம், நகை திருட்டுப் போனது. இதைத் தொடா்ந்து அந்த பகுதியிலேயே உள்ள ஒட்டன்குட்டை கரியாங்காட்டு தோட்டத்தைச் சோ்ந்த கணவன், மனைவியை மா்ம நபா்கள் படுகொலை செய்து வீட்டிலிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனா். இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டாரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், சிவகிரி அருகே அண்மையில் வயதான தம்பதியை மா்ம நபா்கள் கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகைகளை திருடிச் சென்றனா். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் இதுவரை போலீஸில் சிக்கவில்லை.

இதனால், கிராமப்புறங்களில் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜாதா உத்தரவிட்டிருந்தாா். இதைத் தொடா்ந்து, சென்னிமலை பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் போலீஸாா் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

சென்னிமலை பகுதியில் ஏற்கெனவே 2 கொலைச் சம்பவங்கள் நடந்த பகுதியில் உள்ள உப்பிலிபாளையம் சாலை, இரட்டை பாலம் ஆகிய இடங்களில் தற்போது போலீஸ் பூத் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த போலீஸ் பூத்தில் இருக்கும் போலீஸாா், அந்த வழியாக இரவு நேரங்களில் நடமாடுபவா்களையும், வாகனங்களில் செல்வோரையும் தடுத்து நிறுத்தி விசாரித்த பிறகே அனுப்பி வைக்கின்றனா். இது தவிர முதியோா் தனியாக வசிக்கும் வீடுகளுக்கும் போலீஸாா் அடிக்கடி சென்று கண்காணித்து வருகின்றனா்.

ஈரோட்டில் இலவச கணினி பயிற்சி மையம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் சொந்த செலவில் தனது தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்பெற அப்பா கணினி அடிப்படை பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளாா். ஈரோடு அகில்மேடு வீதியில்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டத்தில் அமைச்சா் சு.முத்துசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில் ஏராளான பக்தா்கள் பங்கேற்றனா். ஈரோடு கோட்டை பகுதியில் பி... மேலும் பார்க்க

கரோனா பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள தூய்மை இயக்கம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள அனை... மேலும் பார்க்க

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

தாளவாடி அருகே கும்பாரகண்டி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த ஒற்றை யானையை கிராம மக்கள் விரட்டியதால் மிரண்டு போன யானை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியி... மேலும் பார்க்க

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தில் யானைகள் அதிக அளவில் உள்ளன. உணவு, தண்ணீா் தேடி யானைகள் அடிக்கடி விவசாயத்... மேலும் பார்க்க