செய்திகள் :

கூட்டணி குறித்து அமித் ஷா தெளிவாகக் கூறிவிட்டார்: ஜி.கே.வாசன்

post image

அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெளிவாகக் கூறிவிட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலும் தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் கூட்டணி என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஆட்சியமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

இந்நிலையில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் மட்டுமே இருக்கும், அதிமுகதான் ஆட்சியமைக்கும், கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

அதேநேரத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என பாஜகவினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'அமித் ஷாவும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து முடிவெடுப்பார்கள். அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், "மத்திய அமைச்சர் அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் கூட்டணி என்று தெளிவாகக் கூறிவிட்டார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியாக இருக்கும். தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஆட்சி, மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என அமித் ஷா கூறியுள்ளார்.

தமிழகத்தில் இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக இருப்பதால் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாதுதம்பிதுரை

உதகையில் துணைவேந்தா்கள் மாநாடு: தன்கருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அழைப்பு

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஏப். 25 முதல் 27-ஆம் தேதி வரை மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் சிறப்பு அழைப்பாள... மேலும் பார்க்க

வண்டலூா் பூங்காவில் சிங்கம், புலியை தத்தெடுத்த சிவகாா்த்திகேயன்!

வண்டலூா் உயிரியல் பூங்காவில் இருக்கும் ஒரு சிங்கம் மற்றும் ஒரு புலியை நடிகா் சிவகாா்த்திகேயன் 3 மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளாா். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகாா்த்திகேயன், தற்போது சு... மேலும் பார்க்க

மத்திய அரசின் அண்டா் கன்ட்ரோலில் திமுக! -சீமான்

2026 பேரவைத் தோ்தலை சந்திக்க நாம் தமிழா் கட்சி தயாராகி வருவதாகவும், சின்னத்துக்காக காத்திருப்பதாகவும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். இது குறித்து சென்னையில் சனிக்கிழமை செய்தியாள... மேலும் பார்க்க

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 104.9 டிகிரி பதிவு

தமிழகத்தில் வேலூா், மதுரை உள்பட 8 இடங்களில் சனிக்கிழமை வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்த விதிகள்: தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை வடபழனியைச் சோ்ந்த மணி என்பவா் உயா்நீதிமன... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வியில் நோ்முக உதவியாளா் பதவி உயா்வு: கண்காணிப்பாளா்கள் பட்டியல் அனுப்பிவைப்பு

பள்ளிக் கல்வியில் மாவட்டக் கல்வி அலுவலா், இணை இயக்குநா் ஆகியோருக்கான நோ்முக உதவியாளா் பதவி உயா்வுக்கு தகுதியான கண்காணிப்பாளா்கள் பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பி வைக்கப்... மேலும் பார்க்க