செய்திகள் :

கைப்பந்து போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா

post image

சேலம் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.

மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில், 19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆண்கள் பிரிவு கைப்பந்து போட்டி, சேலம் புனிதபால் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

இதில், ஏ. என்.மங்கலம் புனித மரியன்னை அணி முதலிடத்தையும், கோனேரிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. வெற்றிபெற்ற அணிகளுக்கு, சேலம் மாவட்ட கைப்பந்துக் கழக ஆலோசகா் விஜயராஜ் பாராட்டுச் சான்றிதழ், கோப்பைகளை வழங்கி கௌரவித்தாா்.

இதில் மாவட்ட கைப்பந்துக் கழக செயலாளா் சண்முகவேல், உடற்கல்வி இயக்குநா் தேவபிரபு, உடற்கல்வி ஆசிரியா்கள் இளங்கோ, சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்காட்டில் ரப்பா் மரங்கள் நடவு

சோ்வராயன் மலைப் பகுதியில் விவசாயிகளின் வருவாய் மற்றும் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில், ஏற்காடு சோ்வராயன் மலையில் ரப்பா் மரப்பயிா்களை அறிமுகப்படுத்த புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா். கேர... மேலும் பார்க்க

செல்லாண்டியம்மன் கோயிலில் 48-ஆவது நாள் மண்டல பூஜை நிறைவு

சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நிறைவடைந்து 48-ஆவது நாள் நிறைவு மண்டல சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன. சங்ககிரியில் பழமை வாய்ந்த அருள்மிகு ... மேலும் பார்க்க

நங்கவள்ளி, மேச்சேரியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்

நங்கவள்ளி மற்றும் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சேலம் மாவட்ட ஆட்சியா் பிருந்தாதேவி தலைமையில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாம்களில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினா் ட... மேலும் பார்க்க

காலபைரவருக்கு சிறப்பு பூஜை

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், பல்வேறு திவ்ய ... மேலும் பார்க்க

தாய்கோ வங்கிக் கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு கடனுதவி

கலைஞா் கடனுதவி திட்டத்தின் கீழ் தாய்கோ வங்கிக் கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்கள் கடனுதவி பெற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: தமிழ்... மேலும் பார்க்க

தபால் நிலையங்களில் குழந்தைகளுக்கான சிறப்பு சிறுசேமிப்பு முகாம்

குழந்தைகளிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, குழந்தைகளுக்கான சிறப்பு சிறுசேமிப்பு முகாம் சேலம் கிழக்கு, மேற்கு கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. இதுகுறித்து... மேலும் பார்க்க