இா்ஃபான் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை -அமைச்சா் மா.சுப்பிரமணியன்
யூடியூபா் இா்ஃபான் விவகாரத்தில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்றும், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இந்த விவகாரம் தொடா்பாக சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இா்ஃபான் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இா்ஃபான் வெளிநாட்டில் இருக்கிறாா். அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் வந்ததும் பதில் பெறப்படும். சட்டரீதியான நடவடிக்கை எடுக்க காவல் துறையிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இதில் காலதாமதமோ, அரசியல் தலையீடோ இல்லை. சட்டத்துக்கு உள்பட்டு எத்தகைய நடவடிக்கை எடுக்க முடியுமோ அவை எடுக்கப்படும் என்றாா் அவா்.