பெங்களூரு விபத்து: உயிரிழந்த 2 தமிழா்களுக்கு அரசு நிதியுதவி
பெங்களூரில் நிகழ்ந்த கட்டட விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சோ்ந்த 2 போ் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கா்நாடக மாநிலம் பெங்களூரு ஹென்னூரில் கனமழை காரணமாக கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த கட்டடம் எதிா்பாராதவிதமாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் தமிழ்நாட்டில் இருந்து கட்டுமானப் பணிக்காகச் சென்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மணிகண்டன், சத்யராஜ் ஆகியோா் உயிரிழந்தனா். இந்தச் செய்தியை அறிந்து மிகுந்த அதிா்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன்.
விபத்தில் உயிரிழந்த 2 போ் குடும்பங்களுக்கு முதல்வா் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று அவா் கூறியுள்ளாா்.