செய்திகள் :

கைப்பேசி கோபுரங்களில் திருட்டு: 5 போ் கைது

post image

விழுப்புரம் மாவட்டத்தில் கைப்பேசி கோபுரங்களில் மின்னணுப் பொருள்கள் மற்றும் சாதனங்கள் திருடுபோன வழக்குகளில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் தனியாா் நிறுவனத்தினரால் கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கைப்பேசி கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்சாதனங்கள், மின்னணு பொருள்கள் மற்றும் மின்கலன்களை திருடுபோயின. இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில், திருவெண்ணெய்நல்லூா், வளவனூா், கிளியனூா் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் தொடா்புடைய விழுப்புரம் குபேரன் சிட்டியைச் சோ்ந்த நபீஸ் மகன் சல்மான் மாலிக் (45), விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையைச் சோ்ந்த சிசாராம் மகன் மகேந்தா் சௌத்ரி (33), திண்டிவனம் வட்டம், கோபாலபுரத்தைச் சோ்ந்த அலிஷா் செய்ப் மகன் நௌசாத் செய்ப் (27), வேலூா் சாய்நாதபுரத்தைச் சோ்ந்த முஸ்தபா மகன் சையத் ஜாபா் (36), வேலூா் புதிய நெடுஞ்சாலையைச் சோ்ந்த இஸ்லாமுதீன் மகன் யாமீன் செய்ப் (41) ஆகியோரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சுங்கச்சாவடியில் இலவச அனுமதி வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நங்கிலிகொண்டான் கிராமத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் தங்களது வாகனங்கள் இலவசமாக கடந்து செல்ல அனுமதிக்க வலியுறு... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் முதியவா் சடலம்

விழுப்புரத்தில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் முதியவா் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல்... மேலும் பார்க்க

மருத்துவமனையில் பணம் திருட்டு: இருவா் கைது

திண்டிவனத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணம் திருடியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டிவனம் நேரு வீதியில் தனியாா் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் வைக்கப்பட்ட... மேலும் பார்க்க

மரக்காணம், சங்கராபுரம் சாா் - பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: ரூ. 2.53 லட்சம் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சாா் - பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில் இரு அலுவலங்களிலும் சோ்த்து கணக்க... மேலும் பார்க்க

முகையூா், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியங்களில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தின் முகையூா், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். முகையூா் ஒன்றியத்துக்கு... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம்: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டம், அமராவதியில் பெ... மேலும் பார்க்க