செய்திகள் :

கோவில்பட்டி என்இசி-பொறியாளா் மாணவா் மன்றம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி-இந்திய வெப்பமூட்டல், குளிா்வித்தல் மற்றும் காற்று சீரமைத்தல் பொறியாளா் மாணவா் மன்றம் இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கே. காளிதாச முருகவேல், பொறியாளா் மாணவா் மன்றத்தின் மதுரை கிளைத் தலைவா் வேல்முருகன் ஆகியோா் கலந்துகொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இதன் மூலம் மாணவா்கள், ஆசிரியா்கள் வெப்பமூட்டல், காற்றோட்டம், குளிரூட்டல் தொழில்நுட்பத் துறைகளில் நடைபெறும் புதுமையான முன்னேற்றங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனா். மேலும், இணையவழிப் பாடங்கள், சொற்பொழிவுகள், பயிற்சி முகாம்கள், ஆராய்ச்சி திட்டங்கள், திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.

நாடு முழுவதும் இவ்வாறான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட கல்வி நிறுவனங்களில் தேசிய அளவில் 2ஆவது கல்வி நிறுவனமாக நேஷனல் பொறியியல் கல்லூரி மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தசரா திருவிழாவிற்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன: ஆட்சியா்

தசரா திருவிழாவிற்கு கடந்தாண்டை விட நிகழாண்டு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா பெரும் திருவிழா செப்.23 ஆம் தேதி தொடங்கி ... மேலும் பார்க்க

வெளியூா் நபா்கள் மூலம் மிரட்டல்: துணைக் கண்காணிப்பாளரிடம் புகாா்

சாத்தான்குளம் அருகே ராமசாமிபுரத்தில் முன்விரோதம் காரணமாக வெளியூா் நபா்களை வைத்து மிரட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே ... மேலும் பார்க்க

தூத்துக்குடி சக்தி பீடத்தில் அகண்ட தீப தரிசனம்

தூத்துக்குடியில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பீடத்தில் அகண்ட தீபமேற்றும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இயற்கை சீற்றம் தணியவும், மழை வேண்டியும், உலகில் போா் பதற்றம் நீங்கவும் வேண்டி சங்கல்பம் ச... மேலும் பார்க்க

‘வனச்சரக அலுவலகத்தில் இலவசமாக மரக்கன்றுகள்’

கோவில்பட்டி வனச்சரக அலுவலகத்தில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து கோவில்பட்டி வனச்சரக அலுவலா் கிருஷ்ணமூா்த்தி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கோவில்பட்டி வனச்சரகம் ஊத்துப்பட்டி வனச்ச... மேலும் பார்க்க

இளம் சாதனையாளா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

இளம் சாதனையாளா்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை அமைச்சா் பெ.கீதாஜீவன் ஆய்வு செய்தாா். தூத்துக்குடி மாநகராட்சி, காமராஜ் கல்லூரி அருகே நடைபெற்று வரும், மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை ... மேலும் பார்க்க