செய்திகள் :

கோவில்பட்டிக்கு வருகைதரும் அப்பாவு, கீதாஜீவனுக்கு கறுப்புக் கொடியுடன் கிராம மக்கள் எதிர்ப்பு!

post image

கோவில்பட்டியில் தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வருகை தரும் பேரவைத் தலைவர் அப்பாவு , அமைச்சர். பெ. கீதாஜீவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை கம்பங்களில் கறுப்புக் கொடி கட்டியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் உள்ள தினசரி சந்தைகளுக்கு எதிராக தெற்கு திட்டங்குளம் பகுதியில் தனியார் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. சட்டவிதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாகவும், அதற்கு பெறப்பட்ட நிலத்திலும் முறைகேடுகள் இருப்பதாகவும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த தனியார் தினசரி சந்தையில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு வியாழக்கிழமை (இன்று) கால்கோள் விழா நடைபெறவுள்ளது.

இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன.

முறைகடுகள் அதிகமாக உள்ள தனியார் தினசரி சந்தை நிகழ்வில் பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொள்ளக் கூடாது என்று தெற்கு திட்டங்குளம் மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனைக் கண்டித்தும் பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து தெற்கு திட்டங்குளத்தில் மெயின் சாலை முழுவதும் கம்பங்களில் கறுப்புக் கொடி கட்டி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், பேரவைத் தலைவர், அமைச்சர் வரும்பொழுது தமிழ் பேரரசு கட்சியினர் கறுப்புக் கொடி காட்டவிருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

பெண் நடத்துநருக்கான உயரம் குறைப்பு: போக்குவரத்துத் துறை

சென்னை; அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பெண் நடத்துநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் குறைந்தபட்ச உயரம் 150 செ.மீ. ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.போக்குவரத்துத் துறை செயலர் க. பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசா... மேலும் பார்க்க

அடையாறு ஆற்றின் கீழ் மெட்ரோ சுரங்கம் தோண்டும் சவாலான பணி: முதல்வர் ஆய்வு

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் அடையாறு ஆற்றிற்கு கீழ் செல்லும் சவாலான வழித்தடப் பகுதி உட்பட மொத்தம் 1.218 கி.மீ தூரத்தை கடந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையப் பகுதியில் சுரங்கம் தோண்டும் ... மேலும் பார்க்க

நெல்லை சிறுவனுக்கு என்ன நேர்ந்தது? அரசு மருத்துவமனை டீன் பதில்

நெல்லை: மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்தார்கள் என்ற தகவலில் உண்மையில்லை. 100 சதவீதம் சிறுவனை காப்பாற்ற முயன்றார்கள் என்று மருத்துவமனை டீன் ரேவதி பாலன் கூறியுள்ளார்.நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மரு... மேலும் பார்க்க

கழுத்தில் கட்டி: நெல்லை அரசு மருத்துவமனையில் சிறுவன் மரணம்! உறவினர்கள் போராட்டம்

நெல்லை: நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தென்காசியைச் சேர்ந்த சிறுவன் திடீரென உயிரிழந்த விவகாரத்தில் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் டீன் அலுவலகத்தை 2-வது நாளாக முற்றுகையிட்டு இன்று... மேலும் பார்க்க

திமுகவினர் அண்ணாமலையைப் போல இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல: சேகர்பாபு

சென்னை: அண்ணா அறிவாலயத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாதவர் எப்படி செங்கல்லை பிடுங்க முடியும் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.திருவான்மியூரில் பாஜக... மேலும் பார்க்க

அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது: ஆர்.எஸ். பாரதி

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது என்று சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறினார்.சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ்... மேலும் பார்க்க