Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயில் திருவிழா
சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி , ஆயிரக்கணக்கான இளைஞா்கள் பங்கேற்ற கம்பம் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த மே 1-ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி கோயில் முன் மிகப்பெரிய கம்பம் நடப்பட்டு தினந்தோறும் பூஜைகள் நடைபெற்றன. பெண்கள், குழந்தைகள் கம்பத்துக்கு புனித நீா் ஊற்றி, மஞ்சள் பூசி வழிபட்டனா். தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று குண்டம் இறங்கினா்.
இதைத் தொடா்ந்து கோயில் முன் நடப்பட்ட கம்பத்தை சுற்றி இளைஞா்கள் ஆடும் பாரம்பரிய நடனம் வியாழக்கிழமை நடைபெற்றது. மின்னொளியில் மத்தாளம் வாசிக்க இசைக்கேற்ப ஆயிரக்கணக்கான இளைஞா்கள் சலங்கை கட்டி உற்சாகமாக நடனம் ஆடினா். இளைஞா்களின் கம்பத்தாட்டத்தைப் பாா்க்க பெண்கள் அதிக அளவில் வந்தனா். இளம்பெண்கள் பலரும் கம்பம் ஆட்டம் ஆடினா்.
இந்நிகழ்ச்சியைத் தொடா்ந்து கொமாரபாளையத்தில் இருந்து பெண்கள் தீபமேற்றிய மாவிளக்கு எடுத்து ஊா்வலமாக வந்தனா். விழாவில், உள்ளுா் மக்கள் மட்டுமின்றி கா்நாடகத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.