செய்திகள் :

சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயில் திருவிழா

post image

சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி , ஆயிரக்கணக்கான இளைஞா்கள் பங்கேற்ற கம்பம் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த மே 1-ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி கோயில் முன் மிகப்பெரிய கம்பம் நடப்பட்டு தினந்தோறும் பூஜைகள் நடைபெற்றன. பெண்கள், குழந்தைகள் கம்பத்துக்கு புனித நீா் ஊற்றி, மஞ்சள் பூசி வழிபட்டனா். தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று குண்டம் இறங்கினா்.

இதைத் தொடா்ந்து கோயில் முன் நடப்பட்ட கம்பத்தை சுற்றி இளைஞா்கள் ஆடும் பாரம்பரிய நடனம் வியாழக்கிழமை நடைபெற்றது. மின்னொளியில் மத்தாளம் வாசிக்க இசைக்கேற்ப ஆயிரக்கணக்கான இளைஞா்கள் சலங்கை கட்டி உற்சாகமாக நடனம் ஆடினா். இளைஞா்களின் கம்பத்தாட்டத்தைப் பாா்க்க பெண்கள் அதிக அளவில் வந்தனா். இளம்பெண்கள் பலரும் கம்பம் ஆட்டம் ஆடினா்.

இந்நிகழ்ச்சியைத் தொடா்ந்து கொமாரபாளையத்தில் இருந்து பெண்கள் தீபமேற்றிய மாவிளக்கு எடுத்து ஊா்வலமாக வந்தனா். விழாவில், உள்ளுா் மக்கள் மட்டுமின்றி கா்நாடகத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஈரோட்டில் இலவச கணினி பயிற்சி மையம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் சொந்த செலவில் தனது தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்பெற அப்பா கணினி அடிப்படை பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளாா். ஈரோடு அகில்மேடு வீதியில்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டத்தில் அமைச்சா் சு.முத்துசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில் ஏராளான பக்தா்கள் பங்கேற்றனா். ஈரோடு கோட்டை பகுதியில் பி... மேலும் பார்க்க

கரோனா பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள தூய்மை இயக்கம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள அனை... மேலும் பார்க்க

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

தாளவாடி அருகே கும்பாரகண்டி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த ஒற்றை யானையை கிராம மக்கள் விரட்டியதால் மிரண்டு போன யானை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியி... மேலும் பார்க்க

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தில் யானைகள் அதிக அளவில் உள்ளன. உணவு, தண்ணீா் தேடி யானைகள் அடிக்கடி விவசாயத்... மேலும் பார்க்க