செய்திகள் :

சத்தீஸ்கரில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

post image

சத்தீஸ்கரின் பஸ்தா் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இது தொடா்பாக, பஸ்தா் சரக காவல் துறை ஐ.ஜி. சுந்தர்ராஜ் கூறியதாவது: கோண்டாகான் மற்றும் நாராயண்பூா் மாவட்டங்களின் எல்லையில் உள்ள வனப் பகுதியில் நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, அங்கு காவல் துறையின் மாவட்ட ரிசா்வ் படையினா் (டிஆா்ஜி), பஸ்தா் ஃபைட்டா்ஸ் படைப் பிரிவினா் செவ்வாய்க்கிழமை மாலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, நக்ஸல் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. சம்பவ இடத்தில் ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் சிக்கின.

கொல்லப்பட்ட இரு நக்ஸல்களும் ஹல்தாா் மற்றும் ராமே என அடையாளம் காணப்பட்டுள்ளனா். பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவா்களைக் கைது செய்வதற்காக முறையே ரூ.8 லட்சம், ரூ.4 லட்சம் வெகுமதி அறிவித்து காவல் துறையினா் தேடி வந்தனா் என்றாா் அவா்.

இந்த இருவருடன் சோ்த்து, சத்தீஸ்கரில் நடப்பாண்டு பாதுகாப்புப் படையினரால் இதுவரை கொல்லப்பட்ட நக்ஸல் தீவிரவாதிகளின் எண்ணிக்கை 140-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 123 போ், நாராயண்பூா், கோண்டாகான் உள்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தா் பகுதியில் கொல்லப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம்! - உத்தவ் தாக்கரே

ஹிந்தியை கட்டாயமாக்க மகாராஷ்டிரத்திலும் எதிர்ப்பு வலுத்துள்ளது.மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன்கீழ், மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழ... மேலும் பார்க்க

ஆர்பிஐ தங்க கையிருப்பின் மதிப்பு சுமார் ரூ.12,000 கோடி அதிகரிப்பு

நாட்டின் மத்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு மதிப்பு ஏப்ரல் 11ஆம் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் ரூ.12,000 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. பொருளாதார நிலையற்றத் தன்மை, உலக நாடுகளிடைய ஏற்பட்டிருக்க... மேலும் பார்க்க

தில்லி கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாஃபாத்தில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்து விபத்த... மேலும் பார்க்க

நீட் முதுநிலை தேர்வு: மருத்துவர்கள் கோரிக்கை ஏற்கப்படுமா?

ஜூன் 15-ஆம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 9 - 12.30 மணிவரை, அதனைத்தொடர்ந்து அதே நாளில் மாலை 3.30 - 7 மணிவரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், இரு தொகுதிகளாக நீட் தேர்வு நடத்த வேண்... மேலும் பார்க்க

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 12-ஐ சேர்ந்தவர் அனூப் மன்சந்தா. இவர் மதுபோதையில் தனது மனைவியி... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவர் மீது காரை ஏற்றி கொன்ற பாஜக தொண்டர்: முன்பகை காரணமா?

சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பாஜக தொண்டர் ஒருவர் காரை மோதியதில் காங்கிரஸ் தலைவர் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை டோக்ரி குடா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடைபெ... மேலும் பார்க்க