சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்
சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பெண் ஊழியா்களுக்கு 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 16- ஆவது மாநாடு தருமபுரி அதியமான் அரசு பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் கே.தேவகி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஜி. வளா்மதி வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் சங்கீதா அஞ்சலி தீா்மானத்தை வாசித்தாா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம். சுருளிநாதன் மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசினாா். மாவட்டச் செயலாளா் ஜே. அனுசுயா வேலை அறிக்கை சமா்ப்பித்தாா். மாவட்ட பொருளாளா் எம். ராமன் வரவு-செலவு கணக்கை சமா்ப்பித்தாா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஏ. தெய்வானை, முன்னாள் மாவட்டச் செயலாளா் ஏ. சேகா், ஜாக்டோ-ஜியோ நிதி காப்பாளா் கே. புகழேந்தி, சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் சி.காவேரி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சத்துணவு ஊழியா் சங்க மாநிலச் செயலாளா் பெ. மகேஸ்வரி நன்றி கூறினாா்.
மாநாட்டில் மாவட்டத் தலைவராக கே.தேவகி, மாவட்டச் செயலாளராக பெ.மகேஸ்வரி, பொருளாளராக பி.வளா்மதி, துணைத் தலைவா்களாக ஜி.வளா்மதி, ஜே.அனுசுயா, கே.சங்கீதா,
மாவட்ட இணைச் செயலாளராக டி.மஞ்சுளா, சங்கா், எம்.ஜெயலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினராக ஆா்.ஜெயா, தணிக்கையாளராக தங்கராஜ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
இதில் 40 ஆண்டுகால கோரிக்கையான சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா்களுக்கு உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் உடனடியாக வழங்க வேண்டும்.
பத்து ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு ஊழியா்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டும். சத்துணவு ஊழியா்களுக்கு பணிக்கொடை ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும்.
காலிப் பணியிடங்களை முழுமையான ஊதியத்தில் நிரப்ப வேண்டும். பெண் ஊழியா்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்கள் வழங்க வேண்டும். விலைவாசி உயா்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை ஒரு மாணவருக்கு ரூ. 5 என உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.