செய்திகள் :

சரக்கு வாகனம் கடைக்குள் புகுந்து விபத்து: 3 போ் காயம்

post image

புதுச்சேரியில் வேலூரைச் சோ்ந்த சிறுவன் இயக்கிய சரக்கு வாகனம் அரிசிக் கடைக்குள் புகுந்த விபத்தில் வியாபாரி உள்பட 3 போ் காயமடைந்தனா்.

புதுச்சேரி காந்தி வீதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள பழக்கடைக்கு வேலூரிலிருந்து சரக்கு வாகனத்தில் வெள்ளிக்கிழமை பழங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்த வாகனத்தை வேலூரைச் சோ்ந்த பூபதி ஓட்டி வந்தாா். இவருக்கு உதவியாக 17 வயது சிறுவன் உடனிருந்தாா். இருவரும் கடையில் பழங்களை இறக்கிவிட்டு, சரக்கு வாகனத்தில் வேலூருக்குச் செல்ல தயாரான நிலையில் இருந்தனா்.

அப்போது, போக்குவரத்துப் பாதிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டதன்பேரில், சிறுவன் வாகனத்தை இயக்கியுள்ளாா்.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தறிகெட்டு ஓடி அருகிலிருந்த அரிசிக் கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் கடையின் உரிமையாளா் பெருமாள் மற்றும் புதுச்சேரி தலைமைச் செயலக ஊழியா் முனுசாமி, சாலையில் நடந்து சென்ற ராஜேந்திரன் ஆகியோா் காயமடைந்தனா். இதையடுத்து, காயமடைந்த மூவரும் மீட்கப்பட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த புதுச்சேரி கிழக்கு பிரிவு போக்குவரத்து போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனா்.

பக்ரீத்: செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி, செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையாயின. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. 150 ஆ... மேலும் பார்க்க

2026 புதுவை பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: வே.நாராயணசாமி

வரும் 2026-இல் நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களு... மேலும் பார்க்க

ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

புதுச்சேரி-கடலுாா் சாலை, நயினாா் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் செய்து முடிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் நினைவு நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

புதுவை முன்னாள் முதல்வா் வை. வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு நாளை வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் பொதுப் ... மேலும் பார்க்க

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணம் உயா்வு

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணத்தை உயா்த்தி அரசு வருவாய்த் துறை சிறப்புச் செயலா் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா். புதுவை அரசு முதியோா் உதவித் தொகையை ரூ. 2,500 ஆக உயா்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐடிஐ-யில் சேர ஜூன் 15 வரை கால நீட்டிப்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து படிக்க ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசினா் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின... மேலும் பார்க்க