செய்திகள் :

சாத்தூர் அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து!

post image

சாத்தூர் அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே முத்தாண்டியாபுரத்தில் ரகுநாதன்(50) என்பவருக்குச் சொந்தமான தனலட்சுமி என்ற பெயரில் இயங்கி வந்த தீக்குச்சி தயாரிப்பு குடோன், கடந்த 2 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்துள்ளது. இந்த தீக்குச்சி குடோனில் இன்று(புதன்கிழமை) அதிகாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

சம்பவம் அறிந்து சென்ற தீயணைப்புப்படையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிகாலை நேரம் என்பதால் உள்ளே யாரும் இல்லாததன் காரணமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் ரகுநாதன் என்பவருக்குச் சொந்தமாக கரிசல்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் விதிமீறல் காரணமாக சமீபத்தில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து தற்போது வெடி விபத்து ஏற்பட்ட குடோனில் உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

மின் கசிவு காரணமாகவோ அல்லது பட்டாசு தயாரிக்கும்போதோ வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த வெடி விபத்தில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதமானது. இதுதொடர்பாக ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிமையாளர்கள் மணிசங்கர் குருநாதன் இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூட்டாட்சி என்பதே உண்மையான தேசபக்தி: முதல்வர் ஸ்டாலின்

தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல. மாநில உரிமைகளுடனான கூட்டுறவுக் கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தியாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும் முதல... மேலும் பார்க்க

சென்னை மக்கள் கவனத்துக்கு... பசுமை காய்கறிகள்-பழங்கள் விற்பனை!

தமிழ்நாடு அரசின் ”நம்ம சென்னை நம்ம சந்தை” அங்காடி மூலம் பாரம்பரிய பசுமை காய்கறிகள்-பழங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சென்னைவாழ் மக்களுக்கு பாரம... மேலும் பார்க்க

60,000 பேருக்கு வேலை: மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தை வெளியிட்ட முதல்வர்!

முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப். 30) மின்னணு உதிரிபாகங்கள் (electronic components) உற்பத்திக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை (Tamil Nadu Electronics Components Manufactur... மேலும் பார்க்க

கடலூரில் ஜன. 9ஆம் தேதி தேமுதிக மாநில மாநாடு: பிரேமலதா அறிவிப்பு

தேமுதிக கட்சியின் மாநில மாநாடு வரும் ஜனவரி மாதம் 9ஆம் தேதி கடலூரில் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும்: நயினார் நாகேந்திரன் பதில்

காஞ்சிபுரம்: தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. அதற்கு முன்னதாகவே தேர்தல் பணியை திமுக ஆரம்பித்திருந்தாலும் ஆட்சிக்கு வருவதை மக்கள் முடிவு செய்வார்கள். திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும் என... மேலும் பார்க்க

யானையல்ல.. குதிரை.. கோவையில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களின் போஸ்டர்

கோவை: நான் யானை அல்ல, குதிரை என்று படையப்பா ரஜினி ஸ்டைலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்கார்ந்திருப்பது போன்று அவரது ஆதரவாளர்கள் கோவை முழுக்க ஒட்டியிருக்கும் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ம... மேலும் பார்க்க