செய்திகள் :

நீதிமன்ற உத்தரவுப்படி பணியாற்ற அனுமதி மறுப்பு: கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

post image

சிவகங்கை: நீதிமன்ற உத்தரவுப்படி பணியாற்ற அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை வருவாய கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்துக்கு, மாவட்டத்தலைவர் ப.முத்துவேல் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் கா.செல்வன் கோரிக்கையை விளக்கி பேசினார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கொத்தங்குளம் வடக்கு கிராம நிர்வாக அலுவலராக சி.ஜெயலட்சுமி என்பவர் கடந்த 2022 முதல் 2025 வரை பணியாற்றி வந்தார்.

திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும்: நயினார் நாகேந்திரன் பதில்

இந்நிலையில், கடந்த 17.3.2025 இல் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். வருகின்ற ஜூலை மாதம் பொது கலந்தாய்வு நடைபெற இருப்பதால், அதற்கு முன்னதாக வழங்கப்பட்ட இந்த பணியிட மாறுதலை மறுத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை அணுகி கொத்தங்குளம் வடக்கு கிராமத்திலேயே தொடர்ந்து பணியாற்றலாம் என உத்தரவிட்டது.

ஆனால், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வருவாய் கோட்டாட்சியர் தயக்கம் காட்டுவதாகக்கூறி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான சங்க உறுப்பினர்கள் சுமார 250-க்கும் மேற்பட்டோர் தற்செயல் விடுப்பு எடுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் அஜித்குமார் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நடிகர் அஜித்குமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புது தில்லியில் திங்கள்கிழமை(ஏப்.28) நடைபெற்ற பத்ம விருதுகள் வழங... மேலும் பார்க்க

ஏடிஎம்களில் ரூ.100, ரூ.200 நோட்டுகள் இருப்பதை உறுதி செய்க: வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு

புதுதில்லி: சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் ஏடிஎம் இயந்திரங்களில் போதுமான அளவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி... மேலும் பார்க்க

காவல்துறையினர் ஊழியர் சங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும்: சீமான்

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுபவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை ஒருமித்த குரலில் அரசிடம் கோரி பெறுவதற்கு ஊழியர் சங்கம் கட்டமைக்க அனுமதிக்க வேண்டுமென்ற நெடுங்கால கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி ... மேலும் பார்க்க

கொல்கத்தா தீ விபத்தில் தமிழர்கள் பலி: முதல்வர் இரங்கல்!

கொல்கத்தா நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மேற்கு வங்க ம... மேலும் பார்க்க

கூலித்தொழிலாளி தற்கொலை: கடனை திருப்பிச் செலுத்த தனியார் வங்கி ஊழியர்கள் நெருக்கடி?

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கு, தனியார் வங்கி ஊழியர்கள் கடனை திருப்பிச் செலுத்தக் கோரி நெருக்கடி கொடுத்தது காரணம் என உறவினர்கள் புக... மேலும் பார்க்க

கரியக்கோயில் அணை திறப்பு: ஆற்றுப்படுகை கிராம மக்கள் மகிழ்ச்சி

வாழப்பாடி: சேலம் மாவட்டம் , பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள கரியக்கோயில் அணையிலிருந்து புதன்கிழமை காலை (ஏப்.30) தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், ஆற்றுப்ப... மேலும் பார்க்க