செய்திகள் :

நீதிபதி மகனைத் தாக்கிய விவகாரம்: தர்ஷனுக்கு எதிரான வழக்கு ரத்து!

post image

நீதிபதி மகனைத் தாக்கிய விவகாரத்தில் நடிகர் தர்ஷனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சில நாள்களுக்கு முன் தர்ஷன் வீட்டின் முன்பு உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் காரை நிறுத்திவிட்டு, தனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் அருகிலிருந்த டீக்கடையில் இருந்திருக்கிறார். வெகுநேரம் வீட்டின் முன்பு கார் நிறுத்தப்பட்டிருந்ததால், அதை எடுக்குமாறு தர்ஷன் கூறினாராம்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த நீதிபதியின் மகன், அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடா்பாக நீதிபதியின் மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார், தர்ஷன் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், இந்த வழக்குத் தொடா்பாக தர்ஷனை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அதேவேளையில் தர்ஷன் கொடுத்த புகாரின்பேரில், நீதிபதியின் மகன் தரப்பு மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, போலீஸார் விசாரணை நடத்தினர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு தர்ஷன் கொடுத்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், வாகன நிறுத்த தகராறு விவகாரத்தில் நடிகர் தர்ஷன் - நீதிபதியின் மகன் தரப்பு இடையே சமரசம் ஏற்பட்டதால், இரு தரப்பினருக்கும் எதிராக பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரு புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: பஹல்காம்: தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுத் தலைவராக அலோக் ஜோஷி நியமனம்!

அழகர் கோவிலில் பிக் பாஸ் பவித்ரா ஜனனி! ரசிகர்கள் பகிர்ந்த விடியோ!

மதுரை அழகர் கோவிலில் பிக் பாஸ் புகழ் பவித்ரா ஜனனி சாமி தரிசனம் செய்தார். மேலும், அங்கிருந்த ரசிகர்களுடன் கலந்துரையாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனை ரசிகர் ஒருவர் விடியோ எடுத்துப் பகிர்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதியில் பிஎஸ்ஜி முன்னிலை, ஆர்செனல் தடுமாற்றம்!

சாம்பியன்ஸ் லீக்கின் முதல் கட்ட அரையிறுதியில் பிஎஸ்ஜி அணி முன்னிலை வகிக்கிறது.ஆர்செனல் அணியுடனான முதல் கட்ட அரையிறுதியில் பாரிஸ் ஜெயண்ட் ஜெர்மெயின் (பிஎஸ்ஜி) 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்தப் போட... மேலும் பார்க்க

பணத்தில் கிடைக்காத மகிழ்ச்சி... சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி பகிர்ந்த விடியோ!

உண்மையான மகிழ்ச்சி எதில் கிடைக்கும் என்பது குறித்து சிறகடிக்க ஆசை தொடரின் நாயகி கோமதி பிரியா விடியோ வெளியிட்டுத் தெரிவித்துள்ளார். இதில், கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி, பயணம் செய்யும்போ... மேலும் பார்க்க

30 நாளில் படப்பிடிப்பை முடிந்த பிரம்மயுகம் இயக்குநர்!

நடிகர் பிரணவ் மோகன்லால் இயக்குநர் ராகுல் சதாசிவன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.நடிகர் மோகன்லாலில் மகனும் நடிகருமான பிரணவ் மோகன்லால் ஹிருதயம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் கவனம் பெற்றார்.தொ... மேலும் பார்க்க

முழுக்க முழுக்க ஏஐ! கவனம் ஈர்க்கும் கன்னட திரைப்படம்!

முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தால் உருவான கன்னட திரைப்படம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் வந்தபின் எல்லாத் துறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. கூட்டுழைப்பு அதிகம் தே... மேலும் பார்க்க

டிக்கெட் முன்பதிவில் அசத்தும் ரெட்ரோ!

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்துக்கான டிக்கெட்கள் அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரெட்ரோ திரைப்படத்த... மேலும் பார்க்க