செய்திகள் :

அமேதியில் ராகுல்: ஆயுத தொழிற்சாலையை ஆய்வு செய்தார்!

post image

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக அமேதிக்கு வருகை தந்து முன்ஷிகஞ்சில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையை ஆய்வு செய்தார்.

ரேபரேலி, அமேதி தொகுதியில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி. நேற்று தனது சொந்த தொகுதியாக ரேபரேலியில் ஆய்வு மேற்கொண்ட அவர் இன்று அமேதி தொகுதியில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து ஆய்வு செய்தார்.

கடந்த 2007ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ராகுல் காந்தி ஆயுத தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 2019 மார்ச் அன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட அதே வளாகத்தில் அமைந்துள்ள இந்திய-ஆசிய ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் பிரிவையும் அவர் ஆய்வு செய்தார்.

இந்த இரண்டு தொழிற்சாலைகளிலும் தற்போது துப்பாக்கிகள் தயாரிக்கத் தொடங்கியுள்ளன.

ராகுல்காந்தி தொழிற்சாலைகளுக்குள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் செலவிட்டு, துப்பாக்கிகளை ஆய்வு செய்தார், உற்பத்தி செயல்முறைகளைப் புரிந்துகொள்ள அதிகாரிகளுடன் உரையாடினார்.

இதைத் தொடர்ந்து, அவர் சஞ்சய் காந்தி மருத்துவமனைக்குச் சென்றார், அங்கு சுமார் ரூ.3.5 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய இதயப் பிரிவையும் அவர் திறந்து வைத்தார். அதோடு

மருத்துவமனையால் இயக்கப்படும் புதிய ஆம்புலன்ஸ் சேவையையும் காங்கிரஸ் தலைவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

மேலும், இந்திரா காந்தி நர்சிங் கல்லூரியைப் பார்வையிட்டார். பின்னர் மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார், மேலும் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.

சஞ்சய் காந்தி மருத்துவமனை, இந்திரா காந்தி நர்சிங் கல்லூரி இரண்டும் புது தில்லியில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகின்றன, இதன் தலைவராகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அறங்காவலராக ராகுல் காந்தியும் உள்ளனர்.

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு நிதி: கார்கே

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு நிதி அளிக்குமாறு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது, ``சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியம். இதன் மூலமாகத... மேலும் பார்க்க

சாதிவாரிக் கணக்கெடுப்பு: காங்கிரஸ் கொள்கையை பாஜக ஏற்றுள்ளது - ராகுல்

சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை பாஜக ஏற்றுள்ளதாக அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய ... மேலும் பார்க்க

நடுவர்மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: பல்வேறு விவகாரங்களில் நடுவர் மன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவை, நடுவர்மன்றம் மற்றும் தீர்ப்பாயங்கள் சட்டப்பிரிவு 1996-ன் கீழ், நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம் என்று முக்கியத்துவம் வாய்ந்த தீ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலியாகியுள்ளனர். கைபர் பக்துன்குவாவிலுள்ள தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அஸாம் வர்ஸாக் சோதனைச் சாவடி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குல்: பலியானவரின் குடும்பத்தினரை சந்தித்த ராகுல்!

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.உத்தரப் பிரதேசம் ரேபரேலி மற்றும் அமேதி மக்களவை தொகுதிக... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: 3 நாள்களில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் பலி!

ராஜஸ்தானில் 3 நாள்களில் கள்ளச்சாரயம் குடித்த 8 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அல்வார் மாவட்டத்திலுள்ள பையிண்ட்பூர் மற்றும் கிஷான்பூர் ஆகிய கிராமங்களில் பல காலமாக கள்ளச்சாராயம் விற்கப்பட்... மேலும் பார்க்க