செய்திகள் :

நடுவர்மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம்: உச்ச நீதிமன்றம்

post image

புது தில்லி: பல்வேறு விவகாரங்களில் நடுவர் மன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவை, நடுவர்மன்றம் மற்றும் தீர்ப்பாயங்கள் சட்டப்பிரிவு 1996-ன் கீழ், நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம் என்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், 4:1 என்ற விகிதத்தில் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் பி.ஆர். கவாய், சஞ்சய் குமார், அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகிய நான்கு நீதிபதிகள், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

இதன்படி, ஒரு நடுவர்மன்றம் பிறப்பித்த உத்தரவில், சட்டப்பிரிவு 1996ஐப் பயன்படுத்தி நீதிமன்றங்கள் மாற்றம் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.

வணிக ரீதியிலான விவகாரங்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு நடுவர் மன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கும் இது பொருந்தும்.

இந்த தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இது போன்ற நடுவர்மன்ற உத்தரவுகளில் மாற்றங்களை மேற்கொள்ளும்போது, நீதிமன்றங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதையும் அறிவுறுத்தியுள்ளார்.

இதுபோல, சட்டப்பிரிவு 142-ஐப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நடுவர்மன்ற உத்தரவுகளில் மாற்றங்களை செய்யவும் வழிவகை உள்ளது. ஆனால், இந்த அதிகாரம் என்பது, மிகக் கவனத்துடன் அரசியல் சாசனத்துக்கு உள்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறுகையில், இந்த சட்டம் பற்றிய கேள்விக்கு பதிலாக, நடுவர்மன்ற உத்தரவுகளை மாற்றியமைக்க நீதிமன்றத்திற்கு வரையறுக்கப்பட்ட அளவிலேயே அதிகாரம் உள்ளது என்று கூறுகிறது. நடுவர் மன்றம் மற்றும் தீர்ப்பாயங்கள் சட்டம் 1996ன் கீழ் உள்ள 34 மற்றும் 37 சட்டப்பிரிவுகளுக்கு இவை பொருந்தும் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

ஆனால், இதே அமர்வில் இடம்பெற்ற நீதிபதி கே.வி. விஸ்வநாதன், நடுவர்மன்ற உத்தரவுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்று தனித்த உத்தரவை பிறப்பித்தார்.

அதிக நீதிபதிகள் அளித்த தீர்ப்பே இறுதியாக எடுத்துக் கொள்ளப்பட்டு, நடுவர் மன்றங்கள் பிறப்பித்த உத்தரவில் மாற்றங்களை மட்டும் செய்ய, வரையறுக்கப்பட்ட அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உள்ளது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும், நடுவர் மன்ற உத்தரவுகளில் இருக்கும் அச்சுப்பிழை, கணக்கீட்டுப் பிழைகள் போன்றவற்றை சரி செய்யும் வகையிலானதாக அந்த மாற்றங்கள் இருக்கலாம் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மோதலைக் கைவிட்டு இந்தியா - பாக்., பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: சௌதி அரேபியா!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான விவகாரம் குறித்து சௌதி அரேபியா அரசு கருத்து தெரிவித்துள்ளது.பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலில், 26 பேர் படுகொலை ச... மேலும் பார்க்க

சாதிவாரிக் கணக்கெடுப்பு: சமத்துவத்தை உறுதி செய்துள்ளது பாஜக அரசு!

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் மூலம் நாட்டில் சமத்துவத்தை நிலைநாட்டுவதை அரசு உறுதிப்படுத்தியுள்ளதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்... மேலும் பார்க்க

காஷ்மீரில் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் 48 சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு விடுதி உரி... மேலும் பார்க்க

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு நிதி: கார்கே

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு நிதி அளிக்குமாறு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது, ``சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியம். இதன் மூலமாகத... மேலும் பார்க்க

சாதிவாரிக் கணக்கெடுப்பு: காங்கிரஸ் கொள்கையை பாஜக ஏற்றுள்ளது - ராகுல்

சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை பாஜக ஏற்றுள்ளதாக அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலியாகியுள்ளனர். கைபர் பக்துன்குவாவிலுள்ள தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அஸாம் வர்ஸாக் சோதனைச் சாவடி... மேலும் பார்க்க