செய்திகள் :

காஷ்மீர்: இந்தியாவுக்காக வீர மரணமடைந்த மகன்; நாடுகடத்தப்படும் சூழலில் தாய் -அதிகாரிகள் எடுத்த முடிவு

post image

இந்தியா - பாகிஸ்தான் மக்களிடையேயான உறவு, அரசுகளுக்கிடையேயான உறவிலிருந்து மாறுபட்டது. அட்டாரி - வாகா எல்லை நீண்டநாள்களாக மக்கள் தங்கள் உறவினர்களை சந்திக்கச் செல்லும் பாதையாக இருந்தது. இன்று மீண்டும் நாட்டு மக்களை பிரிக்கும் தடுப்பாக மாறியிருக்கிறது.

காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களை ரத்து செய்து உத்தரவிட்டது இந்திய அரசு.

இதனால் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் இருக்கும் அவர்களது உறவுகளை விட்டு, குடும்பங்களை விட்டு பிரியும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

 முதாசிர் அகமது ஷேக்
முதாசிர் அகமது ஷேக்

வீரமரணமடைந்த இராணுவ வீரரின் தாயார்...

ஜம்மு காஷ்மீரில் பல தசாப்தங்களாக வசித்துவரும் பாகிஸ்தானியர்கள் அவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இந்திய நாட்டுக்காக உயிர் துறந்து, சௌர்ய சக்ரா விருது பெற்ற காவலர் முதாசிர் அகமது ஷேக்கின் தாயார் பிறந்த நாடான பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுகிறார்.

முதாசிர் அகமது ஷேக், 2022-ம் ஆண்டு தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் உயிரிழந்தார். இவரது தாயார் சமீனா அக்தர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதனால் நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்படும் சூழல் எழுந்தது.

இந்தியாவிலேயே இருக்க அனுமதி

ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை நாடுகடத்த அதிகாரிகள் அவர்களை பஞ்சாப்புக்கு பஸ்ஸில் கூட்டிச் சென்று, அங்கு பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர்.

amit shah visit sameena akthar (2022)
amit shah visit sameena akthar (2022)

இப்படியாக கூட்டிச்செல்லப்பட்டுள்ளார் சமீனா அக்தர். ஆனால் அவரது மருமகன் முகமது யூனுஸ், அதிகாரிகளுக்கு சமீனாவின் மகன் குறித்து தெளிவாக விளக்கியதனால் அவர் நாடு கடத்தப்படாமல் இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக சமீனா அக்தரின் மற்றொரு உறவினர், சமீனா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவர் என்றும், அதனால் அவர் நாடுகடத்தப்படக் கூடாது என்றும் செய்தியாளர்களிடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதாசிர் அகமது ஷேக் மரணத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீனாவின் வீட்டுக்கு வந்து பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

1990-களில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் வெடிப்பதற்கு முன்பு, ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரியை திருமணம் செய்துள்ளார் சமீனா அக்தர். 35 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இந்தியாவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

``அடுத்த 24 - 36 மணிநேரத்தில் இந்தியா தாக்குதல் நடத்தலாம்..'' - பாகிஸ்தான் அமைச்சர் சொல்வதென்ன?

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா, பாகிஸ்தான் இடையே உறவு மிக மோசமடைந்து வருகிறது. இதனால், 'இன்னொரு போர் உலகில் உண்டாகிவிடுமோ?' என்று உலகமே அச்சத்தில் உள்ளது. நேற்று, பிரத... மேலும் பார்க்க

Vijay : ``என் வண்டி மேல ஏறி குதிக்காதீங்க!'' - தொண்டர்களுக்கு விஜய் கட்டளை!

'கோயம்புத்தூர் பூத் கமிட்டி கூட்டம்!'கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் தவெகவின் பூத் கமிட்டி கூட்டத்தை கோயம்புத்தூரில் அக்கட்சியின் தலைவர் விஜய் நடத்தியிருந்தார். விஜய்யை வரவேற்க விமான நிலையத்திலும், அவர் ர... மேலும் பார்க்க

Pegasus Spy: ``மத்திய அரசு உளவு மென்பொருளை பயன்படுத்துவதில் என்ன தவறு?'' - உச்ச நீதிமன்றம்

2021-ம் ஆண்டு பெகாசஸ் விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இஸ்ரேலில் இருந்து பெகசாஸ் என்னும் உளவு மென்பொருளை வாங்கியுள்ளது மத்திய பாஜக அரசு. இதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீத... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஸ்ட்ரெஸ்ஸுக்கும் முடி உதிர்வுக்கும் என்ன சம்பந்தம்... தீர்வு என்ன?

Doctor Vikatan: எல்லோருக்கும் இன்று ஸ்ட்ரெஸ் இருக்கிறது. ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை சாத்தியமில்லை என்ற நிலையில்தான் பலரும் இருக்கிறோம். இந்நிலையில் முடி உதிர்வுக்கு ஸ்ட்ரெஸ்ஸை காரணமாகச் சொல்வது எந்த அளவ... மேலும் பார்க்க

Canada: மார்க் கார்னியின் பதவியேற்பு இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன?

கனடா நாட்டின் பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் லிபரல் கட்சியின் தலைவர் மார்க் கார்னி வெற்றி பெற்று கனட அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிற... மேலும் பார்க்க