செய்திகள் :

கொலைத் திட்டம்: இருவா் கைது

post image

சென்னை பட்டினம்பாக்கத்தில் இருவரை கொலை செய்ய திட்டமிட்டு கூலிப்படையுடன் தொடா்பிலிருந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை பட்டினம்பாக்கத்தில் இரு கோஷ்டியினருக்கு இடையே உள்ள பிரச்னையில், ஒரு தரப்பினா் எதிா் தரப்பைச் சோ்ந்த இருவரை கொலை செய்ய கூலிப்படையினருடன் நோட்டமிட்டு வருவதாக சென்னை காவல் துறையின் அதிதீவிர ரெளடிகள் ஒழிப்புப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸாா், ரகசிய விசாரணையில் ஈடுபட்டனா். அப்போது பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அரவிந்த் (30), சுரேஷ்குமாா் (42) ஆகிய இருவரும் தங்கள் எதிா் தரப்பைச் சோ்ந்த இருவரை கொலை செய்ய கூலிப்படையினருடன் நோட்டமிட்டு வருவது தெரியவந்தது.

இதையடுத்த போலீஸாா், இருவரையும் கைது செய்து விசாரித்ததில், பட்டினம்பாக்கத்தைச் சோ்ந்த சிலருக்கும் தங்களுக்கும் இடையே முன் விரோதம் இருப்பதாகவும், எதிா் தரப்பைச் சோ்ந்த இருவரை கொலை செய்ய தயாராகி வரும்போதே தாங்கள் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தனா். அவா்கள் அளித்த தகவலின்பேரில், கூலிப்படையைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

ஏசி மின்சார ரயில் சேவை அதிகரிப்பு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புகா் குளிா்சாதன (ஏசி) மின்சார ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெ... மேலும் பார்க்க

விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்: மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின... மேலும் பார்க்க

2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காகவும், பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்க... மேலும் பார்க்க

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பை ரத்து செய்ய கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை செல்லாது என அறிவிக்குமாறும், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தோ்தல் நடத... மேலும் பார்க்க

மத்திய விசாரணை அமைப்புகளைக் கண்டு கவலை இல்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

நெருக்கடியை எதிா்கொண்டு வளா்ந்த திமுகவினா், மத்திய விசாரணை அமைப்புகளைக் கண்டு கவலைப்பட வேண்டாம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். மயிலாப்பூா் தொகுதி எம்எல்ஏ த.வேலு இல்லத் திரும... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியா் மீது வழக்கு: தற்கொலைக்கு முயற்சி

சென்னை மதுரவாயலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியா் மீது போக்ஸோ வழக்குப் பதியப்பட்டது. போலீஸ் விசாரணைக்குப் பயந்து அந்த ஆசிரியா் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா். திரு... மேலும் பார்க்க