செய்திகள் :

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்

post image

ரஷியாவின் வெற்றி தினக் கொண்டாட்டத்தில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடிக்கு பதிலாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்க இருக்கிறாா்.

இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை ரஷியா வீழ்த்தியதன் நினைவாக இந்த வெற்றிதினம் கொண்டாடப்படுகிறது. இதில் முக்கிய நிகழ்வான மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மே 9-ஆம் தேதி நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சியைப் பாா்வையிட இந்திய பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்டோருக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அழைப்பு விடுத்தாா். மொத்தம் 20 நாடுகளின் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை சீன அதிபா் ஏற்றுக் கொண்டாா். அதே நேரத்தில் இந்தியத் தரப்பில் பிரதமா் மோடியின் பயணம் குறித்து உடனடியாக முடிவெடுக்கப்படவில்லை. இந்நிலையில், பிரதமா் மோடி பங்கேற்க மாட்டாா் என்பதை ரஷிய தரப்பு உறுதி செய்துள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ராணுவரீதியான பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருவதால் பிரதமா் நாட்டில் இருப்பது அவசியமாகிறது. எனவே, ரஷிய பயணத்தை பிரதமா் தவிா்த்திருக்கலாம் என்று தெரிகிறது.

இது தொடா்பாக மத்திய அரசு சாா்பில் தில்லியில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘ரஷியா வெற்றி தின நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமா் மோடிக்கு ரஷியா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், இதில் இந்தியா சாா்பில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்பாா் என ரஷியாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிரதமா் மோடி இந்தியா-ரஷியா ஆண்டுக் கூட்டம் மற்றும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க என இருமுறை ரஷியாவுக்குப் பயணம் மேற்கொண்டாா். ரஷிய அதிபா் புதின் நிகழாண்டு இரு நாடுகளின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வருவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

உலகின் மூத்தப் பெண் 116 வயதில் மரணம்!

உலகின் அதிக வயதான பிரேசில் நாட்டுப் பெண் ஒருவர் 116 வயதில் மரணமடைந்துள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த கிறுஸ்தவப் பெண் துறவி இனாஹ் கனாபாரோ லுகாஸ் (வயது 116). கடந்த 1908-ம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதிய... மேலும் பார்க்க

பூமி திரும்பினா் 3 சீன விண்வெளி வீரா்கள்

சீனாவுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களாகப் பணியாற்றிவந்த ஒரு பெண் உள்பட மூன்று வீரா்கள் பூமிக்கு பாதுகாப்பாக புதன்கிழமை திரும்பினா். காய் ஸுஷே, சாங் லிங்டாங், வாங் ஹா... மேலும் பார்க்க

ராணுவத் தாக்குதலுக்கு தயாராகிவிட்டது இந்தியா - பாகிஸ்தான்

தங்கள் நாடு மீது ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா தயாராகிவிட்டது; அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்று உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தா... மேலும் பார்க்க

யேமன் தாக்குதல்: இணைந்தது பிரிட்டன்

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது நடத்தப்படும் வான்வழித் தாக்குதலில் அமெரிக்காவுடன் பிரிட்டனும் இணைந்தது. இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை

‘இந்தியாவுடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை சிறப்பான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. எனவே, இந்த வா்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்... மேலும் பார்க்க

ஆத்திரமூட்டினால் வலுவான பதிலடி: பாகிஸ்தான் துணைப் பிரதமா்

பாகிஸ்தானுக்கு ஆத்திரமூட்டினால் வலுவாகப் பதிலடி அளிக்கப்படும் என்று அந்நாட்டு துணைப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் டாா் புதன்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைநகா் இஸ்லாம... மேலும் பார்க்க