செய்திகள் :

சாம் கரண் ஒரு போராளி, டெவால்டு பிரீவிஸ் எங்களின் சொத்து: எம்.எஸ். தோனி

post image

பஞ்சாப் உடனான தோல்விக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி கேட்ச்சுகளை தவறவிடாமல் பிடிக்க வேண்டும் எனக் கூறினார்.

சேப்பாகில் நேற்றிரவு (ஏப்.30) நடந்த போட்டியில் 19.4ஆவது ஓவரில் பஞ்சாப் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியில் சாம் கரண் 88 ரன்கள் குவித்தார்.

பதிரான தவறவிட்ட கேட்ச், 17ஆவது ஓவரில் 20 ரன்கள் கொடுத்ததும் ஆடத்தை மாற்றியது.

இந்தத் தோல்விக்குப் பிறகு தோனி பேசியதாவது:

அந்த 7 பந்துகள் மிக முக்கியானவை

பேட்டிங் நன்றாக விளையாடினார்கள். முதல்முறையாக ஓரளவுக்கு நல்ல ரன்களை அடித்தோம். ஆனால், அது போதுமானதாக இல்லை.

இன்னும் கூடுதலாக சில ரன்களை அடித்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. நாங்கள் கேட்ச்சுகளை சரியாக எடுக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

பிரீவிஸ், சாம் இடையேயான பார்ட்னர்ஷிப் நன்றாக இருந்தது. நாங்கள் கடைசி 4 பந்துகள் விளையாடவில்லை, கடைசிக்கு முந்தைய ஓவரில் 4 பேட்டர்கள் ஆட்டமிழந்தோம். இந்தமாதிரியான போட்டிகளில் அந்த 7 பந்துகள் மிக முக்கியானவை.

சாம் கரண் ஒரு போராளி

சாம் கரண் ஒரு போராளி. அது நம் அனைவருக்கும் தெரியும். அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பங்களிக்க நினைக்கிறார். அவருக்கு மெதுவான பிட்ச்களில் வாய்ப்பளித்ததால் அவருக்கு கடினமாகவே இருந்தது.

சொந்த மண்ணில் தற்போதுதான் சிறந்த ஆடுகளத்தைப் பெற்றுள்ளோம். அதனால்தான் கூடுதலாக 15 ரன்கள் தேவை எனக் கூறுகிறேன்.

டெவால்டு பிரீவிஸ் எங்களின் சொத்து

பிரீவிஸ் மிடில் ஆர்டரில் நல்ல கணங்களை உருவாக்குகிறார். நல்ல பந்துகளை சிக்ஸர் அடிக்கும் ஆற்றல் அவரிடம் இருக்கிறது.

ஃபீல்டிங்கிலும் அவர் நல்ல ஆற்றலைக் கொண்டு வருகிறார். அவர் விளையாடும் விதம் எனக்குப் பிடித்துள்ளது. அவர் எங்கள் சொத்தாக மாறுவார் என நினைக்கிறேன் என்றார்.

ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம்..! இந்த சீசனில் முதல்முறை!

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெதுவாக பந்துவீசியதால் ரூ.12 லட்சம் அபராதம் ஸ்ரேயாஷ் ஐயருக்கு விதிக்கப்பட்டதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. சேப்பாக... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரிலிருந்து விக்னேஷ் புதூர் விலகல்: மாற்று வீரர் அறிவிப்பு!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் விக்னேஷ் புதூர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து இளம் சுழல்பந்து வீச்சாளர் விக்னேஷ் புதுர் விலகியதாக 5 முறை கோப்பை வென்... மேலும் பார்க்க

வெளியூர் போட்டிகளில் மட்டும் நன்றாக விளையாடுகிறேனா? ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

பஞ்சாப் அணியின் கேப்டனும் ஆட்ட நாயகன் விருது வென்றவருமான ஷ்ரேயாஸ் ஐயர் எந்தத் திடலிலும் சேஸிங் செய்வது பிடிக்கும் எனக் கூறியுள்ளார். சேப்பாக்கில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் 19.4ஆவது ஓவரில் பஞ்சாப் ... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ் ஒரு டீசல் என்ஜின்..! வருண் ஆரோன் புகழாரம்!

மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து முன்னாள் வீரர் வருண் ஆரோன் புகழ்ந்து பேசியுள்ளார். புள்ளிப் பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வருகிறது. ஐபிஎல் த... மேலும் பார்க்க

மீண்டும் கேப்டனாவதை தோனி எதிர்பார்த்திருக்க மாட்டார்: ஆரோன் பின்ச்

ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் முன்னாள் ஆஸி. வீரர் ஆரோன் பின்ச் எம்.எஸ்.தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியபோது, இவ்வாறான சூழ்நிலைகளை மீண்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் எதிர்பார்த்திருக்க ... மேலும் பார்க்க

ஐபிஎல்: வெளியேறியது சென்னை! பஞ்சாப் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 49-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை புதன்கிழமை வீழ்த்தியது. இந்தத் தோல்வியை அடுத்து சென்னை அணி பிளே ஆஃப் பந்தயத்திலிருந்து வெளியே... மேலும் பார்க்க