செய்திகள் :

மதுரைக்கு வரும் விஜய், பேரணி நடத்தினால் நடவடிக்கை: காவல் ஆணையர் எச்சரிக்கை!

post image

தவெக தலைவர் விஜய் இன்று மாலை மதுரை விமான நிலையம் வரவுள்ள நிலையில், இன்று காலை முதலே தொண்டர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் படப்பிடிப்புக்காக இன்று(வியாழக்கிழமை) கொடைக்கானல் செல்கிறார். இதற்காக இன்று மாலை மதுரை விமான நிலையம் வரவுள்ளார்.

விஜய் வருகையையொட்டி இன்று அதிகாலை முதலே தவெக தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் மதுரையில் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மதுரை விமான நிலையத்தில் கடும் நெரிசல் காணப்படுகிறது.

இந்நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதி வழங்கப்படும், ரசிகர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என காவல் துறை கூறியுள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வரும் விஜய், அங்கிருந்து 5 கிமீ தொலைவுக்கு வாகனத்தில் பேரணியில் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் விஜய், சாலை பேரணி(ரோடு ஷோ) நடத்த காவல்துறையிடம் அனுமதி பெறவில்லை என மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.

காவல்துறை அனுமதியின்றி பேரணி நடத்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக படப்பிடிப்புக்குச் செல்வதால், கட்சி சார்பில் யாரும் வர வேண்டாம் என்று கட்சித் தலைமை அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | பஹல்காம் தாக்குதலுக்கு முன், 3 இடங்களுக்கு குறிவைத்த பயங்கரவாதிகள்?

கரும்பு கொள்முதல் விலை ஒரு டன்னுக்கு ரூ. 5,500 வழங்க வேண்டும்! - ராமதாஸ்

கரும்பு கொள்முதல் விலை ரூ.139 மட்டும்உயர்த்துவது போதாது என்றும் டன்னுக்கு ரூ. 5,500 வழங்க அரசுகள் முன்வர வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

தவெக தொண்டா்களுக்கு விஜய் விடுத்துள்ள அதிரடி உத்தரவு!

நான் என் வேலையைப் பார்க்கச் செல்கிறேன், யாரும் என்னை பின்தொடர வேண்டாம் என்று மதுரை விமான நிலையத்தில் பல மணி நேரமாகக் காத்திருக்கும் தவெக தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ள விஜய், தொண்டா்களின் பாதுகாப்... மேலும் பார்க்க

திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள்தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.உலக உழைப்பாளர்கள் நாளை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிபேட்டை மே நாள் பூங்காவில் உள்ள மே நாள் நினைவுச் சின்னத்திற்கு மு... மேலும் பார்க்க

எத்தகைய தொழில்நுட்பம் வந்தாலும் தமிழக இளைஞர்கள் தகவமைத்து கொள்வார்கள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

சென்னை: ஏஐ உள்ளிட்ட எத்தகைய தொழில்நுட்பம் வந்தாலும் அதற்கேற்ப தமிழக இளைஞர்கள் தகவமைத்து கொள்வார்கள். இதுதான் மற்ற மாநிலத்திற்கு தமிழகத்திற்கு உள்ள வேறுபாடு என தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ... மேலும் பார்க்க

திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் ஆறுவழிச் சாலை பணி: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான 30.10 கி.மீ நீளத்துக்கான ஆறுவழிச் சாலை திட்டப்பணிகளை வியாழக்கிழமை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை எல்லை சால... மேலும் பார்க்க

கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராம மக்கள், தங்களது பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏந்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடலூர... மேலும் பார்க்க