செய்திகள் :

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரரின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம்!

post image

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரரின் இன்ஸ்டாகிராம் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அர்ஷத் நதீம், 2024-ல் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எரிதலில் தங்கம் வென்றுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவிலுள்ள அவரது ரசிகர்கள் நதீமின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்க்க முயன்றபோது அது சட்டப்பூர்வமாக முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான பல அதிரடியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.

அர்ஷ்த் நதீமின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம்...

அதன் அடிப்படையில், பாகிஸ்தான் பிரபலங்கள் பலரது சமூக வலைதளப் பக்கங்களும் இந்தியாவில் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த பல யூடியூப் சேனல்களும், இந்தியாவுக்கு எதிரான பொய்யான தகவல்களை பரப்பியதால் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், பாகிஸ்தானின் முன்னாள் கிரிகெட் வீரர்களான சோயிப் அக்தர், பாசித் அலி மற்றும் ஷாஹித் அஃப்ரிடி ஆகியோரது யூடியூப் சேனல்களும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்படவில்லை.

முன்னதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களான மஹிரா கான் மற்றும் அலி ஜாஃபர் ஆகியோரது இன்ஸ்டாகிராம் கணக்குகளும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஐபிஎல் தொடரிலிருந்து விக்னேஷ் புதூர் விலகல்: மாற்று வீரர் அறிவிப்பு!

விளையாட்டு துளிகள்...

மகளிா் டெஸ்ட் ஹாக்கி தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா வியாழக்கிழமை மோதுகின்றன. சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் எஃப்சி கோவா 3-1 கோல் கணக்கில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட்ட... மேலும் பார்க்க

தொடா் தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் சென்னை: இன்று டெல்லியுடன் மோதல்

ஐபிஎல் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் சென்னையில் சனிக்கிழமை (ஏப். 5) மோதுகின்றன.இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் சென்னை, கடைசி இரு ஆட்டங்களில்... மேலும் பார்க்க

இன்றுமுதல் புதிய ஃபார்மட்டில் சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி போட்டி

ஜான்சி: உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் 15-ஆவது சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் வெள்ளிக்கிழமை (ஏப். 4) தொடங்குகிறது.வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் மொத்தம் 30 அணிகள் பங்க... மேலும் பார்க்க