செய்திகள் :

வெளியூர் போட்டிகளில் மட்டும் நன்றாக விளையாடுகிறேனா? ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

post image

பஞ்சாப் அணியின் கேப்டனும் ஆட்ட நாயகன் விருது வென்றவருமான ஷ்ரேயாஸ் ஐயர் எந்தத் திடலிலும் சேஸிங் செய்வது பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.

சேப்பாக்கில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் 19.4ஆவது ஓவரில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே 190க்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய பஞ்சாப் அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார்.

இறுதியில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார். இது குறித்து போட்டிக்குப் பிறகு அவர் கூறியதாவது:

எங்கு விளையாடினாலும் சேஸிங் பிடிக்கும்

எந்தத் திடலிலும் எனக்கு சேஸிங் செய்வதென்றால் பிடிக்கும். மிகப்பெரிய ரன்கள் இலக்காக இருக்கும்போது எனக்கு வெற்றியடைய வேண்டுமென்ற எண்ணம் கூடுதலாக இருக்கிறது.

அணிக்காக பொறுப்பேற்பது பிடிக்கும். நான் ஒரு புறம் பொறுமையாக ஆடும்போது மறுபுறத்தில் மற்றவர்கள் அதிரடியாக விளையாடலாம்.

வெளியூர்களில் மட்டுமே நன்றாக விளையாடுகிறேன் என்ற விஷயத்தில் என்ன சொல்லுவது? நான் அதில் சாபம் விட விரும்பவில்லை. நிகழ்காலத்தில் இருந்து பந்திக்கு ஏற்றபடி விளையாட வேண்டும்.

தன்னம்பிக்கை அளித்த பயிற்சி

நான் எங்கு விளையாடுகிறேன் என்பது முக்கியமில்லை. என்னுடைய பாணியில் விளையாடுகிறேன். சில நேரங்களில் அது வேலை செய்கிறது, சில நேரங்களில் செய்வதில்லை.

வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நான் அதிகமாக பயிற்சி எடுத்தேன். அது எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது.

குறிப்பாக புதிய பந்தில் பயிற்சி எடுத்ததால் எனக்கு மிகுந்த தன்னம்பிக்கை கிடைத்தது. இதைதான் நான் மிகவும் கடினமான பயிற்சி செய்து பெற்றேன்.

ஃபீல்டிங்கில் செல்லும்போது நான் எப்போதும் எனது குணாதியத்தை உயர்வாக வைத்திருக்க விரும்புகிறேன். சிறிய சிறிய கட்டங்களை நிரப்பினாலே போதுமானதென நினைக்கிறேன் என்றார்.

தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை: ஆடம் கில்கிறிஸ்ட்

சிஎஸ்கே கேப்டன் தோனி குறித்து முன்னாள் ஆஸி. வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் அவர் யாருக்கும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை எனக் கூறியுள்ளார். தோனி கடைசியாக 2023இல் கேப்டனாக இருக்கும்போது சிஎஸ்கே அணி தனது 5-ஆவத... மேலும் பார்க்க

ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம்..! இந்த சீசனில் முதல்முறை!

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெதுவாக பந்துவீசியதால் ரூ.12 லட்சம் அபராதம் ஸ்ரேயாஷ் ஐயருக்கு விதிக்கப்பட்டதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. சேப்பாக... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரிலிருந்து விக்னேஷ் புதூர் விலகல்: மாற்று வீரர் அறிவிப்பு!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் விக்னேஷ் புதூர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து இளம் சுழல்பந்து வீச்சாளர் விக்னேஷ் புதுர் விலகியதாக 5 முறை கோப்பை வென்... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ் ஒரு டீசல் என்ஜின்..! வருண் ஆரோன் புகழாரம்!

மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து முன்னாள் வீரர் வருண் ஆரோன் புகழ்ந்து பேசியுள்ளார். புள்ளிப் பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வருகிறது. ஐபிஎல் த... மேலும் பார்க்க

மீண்டும் கேப்டனாவதை தோனி எதிர்பார்த்திருக்க மாட்டார்: ஆரோன் பின்ச்

ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் முன்னாள் ஆஸி. வீரர் ஆரோன் பின்ச் எம்.எஸ்.தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியபோது, இவ்வாறான சூழ்நிலைகளை மீண்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் எதிர்பார்த்திருக்க ... மேலும் பார்க்க

சாம் கரண் ஒரு போராளி, டெவால்டு பிரீவிஸ் எங்களின் சொத்து: எம்.எஸ். தோனி

பஞ்சாப் உடனான தோல்விக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி கேட்ச்சுகளை தவறவிடாமல் பிடிக்க வேண்டும் எனக் கூறினார். சேப்பாகில் நேற்றிரவு (ஏப்.30) நடந்த போட்டியில் 19.4ஆவது ஓவரில் பஞ்சாப் த்ரில் வெற்ற... மேலும் பார்க்க