செய்திகள் :

தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை: ஆடம் கில்கிறிஸ்ட்

post image

சிஎஸ்கே கேப்டன் தோனி குறித்து முன்னாள் ஆஸி. வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் அவர் யாருக்கும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை எனக் கூறியுள்ளார்.

தோனி கடைசியாக 2023இல் கேப்டனாக இருக்கும்போது சிஎஸ்கே அணி தனது 5-ஆவது கோப்பையை வென்றது.

ருதுராஜ் தலைமையில் 2024-இல் சிஎஸ்கே அணி மோசமாக விளையாடியது. இந்த சீசனில் ருதுராஜ் காயம் காரணமாக விலகவே தோனி மீண்டும் கேப்டனானார்.

தோனி கேப்டனாகியும் சிஎஸ்கேவின் தோல்விப் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து முன்னாள் ஆஸி. விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்டருமான கில் கிறிஸ்ட் கூறியதாவது:

கிரிக்கெட்டில் எம்.எஸ்.தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை. அவருக்கு என்னச் செய்ய வேண்டும் எனத் தெரியும். ஆனால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அடுத்தாண்டு ஐபிஎல் சீசனில் அவர் விளையாடக் கூடாது.

நான் உங்களை நேசிக்கிறேன் எம்.எஸ்.தோனி. நீங்கள் ஒரு சாம்பியன், ஒரு அடையாள சின்னம் எனக் கூறினார்.

பேட்டர்கள் சொதப்ப அணியில் பல மாற்றங்களை தோனி கொண்டு வந்துள்ளார். தற்போதுதான், ஓரளவுக்கு சிஎஸ்கே அணியில் பிளேயிங் லெவனை கண்டறிந்துள்ளார்கள்.

டாஸின்போது தோனி நான் அடுத்த போட்டியில் விளையாடுவானா என்றே தெரியாது, இதில் அடுத்த சீசனில் எப்படி என சிரித்துக்கொண்டே பேசியதும் கவனிக்கத்தக்கது.

பதிரானா பந்துவீச்சில் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும்: சிஎஸ்கே பயிற்சியாளர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா அவரது பந்துவீச்சில் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும் என சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சிளார் எரிக் சிமன்ஸ் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொ... மேலும் பார்க்க

ஆட்டத்தின் சூழல்களை நன்றாக புரிந்துகொள்ளும் ஷ்ரேயாஸ் ஐயர்; ரிக்கி பாண்டிங் பாராட்டு!

ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் முதிர்ச்சியடைந்த வீரராக மாறிவிட்டதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ... மேலும் பார்க்க

ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம்..! இந்த சீசனில் முதல்முறை!

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெதுவாக பந்துவீசியதால் ரூ.12 லட்சம் அபராதம் ஸ்ரேயாஷ் ஐயருக்கு விதிக்கப்பட்டதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. சேப்பாக... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரிலிருந்து விக்னேஷ் புதூர் விலகல்: மாற்று வீரர் அறிவிப்பு!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் விக்னேஷ் புதூர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து இளம் சுழல்பந்து வீச்சாளர் விக்னேஷ் புதுர் விலகியதாக 5 முறை கோப்பை வென்... மேலும் பார்க்க

வெளியூர் போட்டிகளில் மட்டும் நன்றாக விளையாடுகிறேனா? ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

பஞ்சாப் அணியின் கேப்டனும் ஆட்ட நாயகன் விருது வென்றவருமான ஷ்ரேயாஸ் ஐயர் எந்தத் திடலிலும் சேஸிங் செய்வது பிடிக்கும் எனக் கூறியுள்ளார். சேப்பாக்கில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் 19.4ஆவது ஓவரில் பஞ்சாப் ... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ் ஒரு டீசல் என்ஜின்..! வருண் ஆரோன் புகழாரம்!

மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து முன்னாள் வீரர் வருண் ஆரோன் புகழ்ந்து பேசியுள்ளார். புள்ளிப் பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வருகிறது. ஐபிஎல் த... மேலும் பார்க்க