செய்திகள் :

சென்னை: கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை; தனியார் வங்கி ஊழியர் சிக்கியது எப்படி?

post image

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 19 வயதாகும் பெண் ஒருவர், கண் மருத்துவமனை கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு லேப் டெக்னிஷியன் படிப்பைப் படித்து வருகிறார்.

இவர் கடந்த 25-ம் தேதி கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்ல நொளம்பூர் வேணுகோபால் தெருவில் தனியாக நடந்து சென்றார்.

அப்போது பைக்கில் அவ்வழியாக வந்த மர்ம நபர், திடீரென மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார். அதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, ஹெல்ப், ஹெல்ப் எனச் சத்தம் போட்டார்.

உடனே பைக்கில் வந்தவர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து மாணவி தரப்பில் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவரைத் தேடிவந்தனர்.

சரத்பாபு
சரத்பாபு

சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் அந்த நபரை போலீஸார் கண்டறிந்தனர். பின்னர் அவரைப் பிடித்து விசாரித்தபோது அந்த நபரின் பெயர் சரத்பாபு (31) என்றும் சென்னை நீலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

இவர், தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் மீது ஏற்கெனவே ஒரு குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. சரத்பாபுவிடம் போலீஸார் விசாரித்தபோது மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து சரத்பாபுவைக் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து நொளம்பூர் போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட சரத்பாபு, மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததைப் போல இன்னும் சிலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தகவல் கிடைத்திருக்கிறது.

ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார்கள் வரவில்லை. அதனால் சரத்பாபுவிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

திருப்பூர்: தலை நசுக்கப்பட்டு இளம்பெண் படுகொலை; தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸ்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் குடியிருப்பில் உள்ள காலி இடத்தில் இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதாக அந்தப் பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.அத்தகவலின் பேரி... மேலும் பார்க்க

`குடிபோதைக்கு அடிமை'; தங்க நகைக்காக தங்கையை கொன்ற வாலிபருக்கு தூக்குத் தண்டனை - நடந்தது என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். (வயது: 32). எந்த வேலைக்கும் செல்லாமல் குடிப்போதைக்கு அடிமையான இவர், தங்க நகைக்காகத் தனது சொந்தச் சித்தி மகளான லோகப்பிரியா என்ற இளம்பெண்... மேலும் பார்க்க

தொழிலதிபர்களிடம் கைவரிசை; பதுங்கியிருந்த மோசடி மன்னன் - சிக்கவைத்த நடிகையின் போன் நம்பர்

மும்பை போரிவலியை சேர்ந்த ஆயுர்வேத டாக்டர் ஒருவர், சுனில் பரஸ்மால் லோதா என்பவரின் பிளேவுட் வியாபாரத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.50 லட்சம் முதலீடு செய்தார். அடுத்த சில மாதத்தில் 38 லட்சம் லாபம் கிடைத்து... மேலும் பார்க்க

`கஸ்டமர்ஸ்க்கு மொபைல் ஆப்; சேப்டிக்கு வாடகை வீடு' - பாலியல் தொழில் செய்த 4 பெண்கள் கைது

தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்திற்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் சென்று கொண்டே இருந்தது. இதில் சில பெண்கள் தொடர்ந்து ... மேலும் பார்க்க

தாய்லாந்திலிருந்து ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்; இந்திய ஹாக்கி அணி முன்னாள் வீரர் சிக்கியது எப்படி?

மும்பை பேலாப்பூரில் கடந்த வாரம் பில்டர் குருநாத் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது மகன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் வழக்கிற்காக தன்னை போலீஸார் அடிக்கடி விசார... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; 5 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை; நண்பரோடு கைதான இளைஞர்; பின்னணி என்ன?

திருச்சி, ஏர்போர்ட் வசந்த நகரைச் சேர்ந்தவர் நாசர் அலி (வயது: 30). இவர், கே.கே நகர்ப் பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.இவருக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கும் திருமணம் மீறிய உறவு இருந்து வந்துள்ள... மேலும் பார்க்க