செய்திகள் :

அருணஜடேசுவரர் கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்!

post image

பிரசித்தி பெற்ற திருப்பனந்தாள் ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் உடனாகிய ஸ்ரீ அருணஜடேசுவரர் திருக்கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் பெரியநாயகி உடனாகிய செஞ்சடையப்பர் திருக்கோயில், திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான 27 திருக்கோயில்களில் ஒன்றாகும். தேவார பதிகம் பெற்ற சிறப்புடைய கோயில் தலவிருட்சம் பனை மரமாகும். இக்கோயில் இங்கு சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் அருணஜடேஸ்வருக்கு செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர், ஜடாதரர் என்ற பெயர்களும் உண்டு. அம்பாளுக்கு பெரிய நாயகிக்கு பிருகந்நாயகி, தாலவனேஸ்வரி எனவும் பெயர்கள் உண்டு.

இங்கு அம்பிகை அருந்தவம் இருந்து சிவபெருமானிடம் ஞானோபதேசம் பெற்றதும், இந்திரனின் சாபத்தால், ஐராவத யானை நாரதரின் சொற்படி, இக்கோயில் தடாகத்தில் நீராடி, செஞ்சடையப்பரை வழிபட்டு தன் முன்னுருவம் பெற்றதாக கூறப்படுகிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ எனும் குறளுக்கு ஏற்ப இக்கோயில் இறைவன் சுயம்பு மூர்த்தி, தாடகையின் அன்பிற்கிணங்கி, திருமுடியை சாய்த்து மலர் மாலையினை ஏற்றுக் கொண்டதும், குங்குலிய நாயனாரின் அன்பிற்கு இணங்கி தலை நிமிர்ந்தார் என்பதும் இதன் புராணம். இந்தக் கோயிலில் வாசுகியின் மகளான சுமதி எனும் நாக கன்னிகை வழிபட்டு, அரித்துவசன் எனும் மன்னனை மணந்து, பின்னர் இங்கு பல்வேறு திருப்பணிகள் செய்து நிறைவாக முக்தியும் பெற்றார்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தலத்தில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 11 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டு இன்று காலை பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியம்பெருமான் பொறிக்கப்பட்ட திருக்கோடி மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க, ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தினமும் காமதேனு கற்பக விருக்ஷக் காட்சி, பூத வாகனக்காட்சி, கயிலாச வாகன காட்சி, கிளி வாகனம், யானை வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான 7ஆம் நாளான வருகிற 7ஆம் தேதி புதன்கிழமை திருக்கல்யாணமும் 9ம் நாளான 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருத்தேரோட்டமும் 10ஆம் நாளான 10ஆம் தேதி சனிக்கிழமை அணைக்கரை கொள்ளிடம் கரையில் தீர்த்தவாரியும் 11ஆம் நாளான 11ஆம் தேதி விடையாற்றியுடன் இவ்வாண்டுக்கான சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.

ரெட்ரோ - திரையரங்கம் முழுவதும் பெண் ரசிகைகள்! எங்கே?

ரெட்ரோ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி பெண்களுக்காக மட்டும் திரையிடப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாக... மேலும் பார்க்க

100-ஆவது போட்டியில் விளையாடிய 17 வயது சிறுவன்..! அடுத்த மெஸ்ஸியா?

பார்சிலோனா அணியில் விளையாடும் 17 வயதான லாமின் யமால் தனது 100-ஆவது போட்டியில் விளையாடியுள்ளார். ஸ்பானிஷைச் சேர்ந்த லாமின் யமால் 2023 முதல் பார்சிலோனா அணியில் விளையாடி வருகிறார். நேற்றிரவு சாம்பியன்ஸ் ல... மேலும் பார்க்க

நீ சிங்கம்தான்! கோலியை புகழ்ந்த சிலம்பரசன்!

கிரிக்கெட் வீரர் விராட் கோலியை நடிகர் சிலம்பரசன் புகழ்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம், சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு நேர்காணலில் அவருக்கு பிடித்த பாடல் எது? என்று ... மேலும் பார்க்க

வெற்றிப் பாதைக்குத் திரும்பினாரா சூர்யா? ரெட்ரோ - திரை விமர்சனம்!

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் ரௌடியாக இருக்கும் திலகன் (ஜோஜூ ஜார்ஜ்) தன் மகன் பாரிவேல் கண்ணனுடன் (சூர்யா) இணைந்து தன் சாம்ராஜ்யத்தை பலம... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி: சமனில் முடிந்த பார்சிலோனா - இன்டர் மிலன்!

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் மோதிய பார்சிலோனா - இன்டர் மிலன் ஆட்டம் சமனில் முடிந்தது.ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் லீக் முதல் கட்ட அரையிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணியும் இன்டர் ம... மேலும் பார்க்க

மே மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் மே மாதப் பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)கிரகநிலை:ராசியில் சூர்யன், பு... மேலும் பார்க்க