செய்திகள் :

கோவை விமான நிலையத்தில் 500 கார்களை நிறுத்தும்வகையில் பார்க்கிங் மையம்!

post image

கோவை விமான நிலையத்தில் 524 கார்களை நிறுத்தும் வகையில் புதிய பார்க்கிங் மையம் அமைக்கப்பட இருக்கிறது.

கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் 10,000 உள்நாட்டுப் பயணிகளும், 1,000 வெளிநாட்டுப் பயணிகளும் பயணம் செய்கிறார்கள்.

விமான நிலைய விரிவாக்கத்துக்காக ரூ. 1,100 கோடியில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவுற்றது. இதைத் தொடர்ந்து ரூ. 2,000 கோடி மதிப்பில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய விமான நிலைய ஆணையரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்பொழுது ஓடுதளம் 2,900 மீட்டர் ஆக உள்ளது. இதனை மேலும் 450 மீட்டர் நீளத்துக்கு நீட்டிக்கவும் பயணிகளுக்கான அடிப்படை வசதி என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகள் அனைத்தும் 2031 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பழைய குடியிருப்புப் பகுதிகளை அகற்றி, அங்கு கார் பார்க்கிங் வசதி மேற்கொள்ளப்பட உள்ளது. மொத்தம் 524 கார்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் மையம் அமைக்க விமான நிலைய ஆணையரகம் ஒப்பந்தம் கோரியுள்ளது.

இந்தப் பணிகள் முடிவடைந்ததும், தற்பொழுது உள்ள பார்க்கிங் இடத்தில் சில மேம்பாட்டு நடவடிக்கைகள் நடைபெற உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விமான நிலையப் பயணிகள் நலச் சங்கத்தினர் கூறும்போது, தற்பொழுது ஒரு மணி நேரத்துக்கு 4 விமானங்கள் கையாளப்பட்டு வருகிறது. தற்பொழுது இருக்கும் வசதியை கொண்டு மேலும் ஒரு டெர்மினல் கட்டடம் கட்டி ஒரு மணி நேரத்துக்கு கூடுதலாக 4 விமானங்களை கையாளும் வசதி செய்யப்பட வேண்டும். அப்பொழுதுதான் பயணிகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராம மக்கள், தங்களது பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏந்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடலூர... மேலும் பார்க்க

உழைக்கும் மக்களின் ஒற்றுமை வெல்லட்டும்!: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

உழைப்பாளர்களின் உற்றத் தோழனாக நம் திராவிட மாடல் அரசு என்றும் அவர்களுடன் கரம் கோத்து நிற்கும். உழைக்கும் மக்களின் ஒற்றுமை வெல்லட்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு ... மேலும் பார்க்க

பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் வருமா? - அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்!

கோடை விடுமுறை முடிந்து வெயிலைப் பொருத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். மேலும் தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ந... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை வினாடிக்கு 1363 கனஅடியாக குறைந்துள்ளது.வியாழக்கிழமை காலை(மே.1) மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.75 அடியாக நீடிக்கிறது. அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 1... மேலும் பார்க்க

அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே. 1) ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,640 குறைந்து ரூ.70,200-க்கு விற்பனை ஆகிறது. கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், அட... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.கொங்கு மண்டலத்தின் ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூர்த்தி ... மேலும் பார்க்க