செய்திகள் :

மோசமான அரசியலில் ஈடுபடும் பஞ்சாப் அரசு: அமைச்சர் குற்றச்சாட்டு!

post image

ஹரியாணா, பஞ்சாப் இடையே நதி நீர் பங்கீடு தொடர்பாக நடந்துவரும் வார்த்தைப் போரில் ஆம் ஆத்மியை ஆளும் பஞ்சாப் அரசு தில்லியில் தண்ணீர் விநியோகத்தை நிறுத்துவதன் மூலம் மோசமான அரசியலில் ஈடுபடுவதாகத் தில்லி பாஜக அரசு குற்றம் சாட்டியது.

ஹரியாணாவின் கோரிக்கைகளை நிறைவேற்ற பக்ரா வியாஸ் மேலாண்மை வாரியம்(பிபிஎம்பி) மூலம் பஞ்சாப் அரசுக்கு பாஜக அழுத்தம் கொடுப்பதாக முதல்வர் பகவந்த் மான் குற்றம் சாட்டினார். மார்ச் மாதத்திற்குள் அண்டை மாநிலம் தனது நீர் பங்கை அளித்துவிட்டதாக அவர் கூறினார்.

இதுதொடர்பாக தில்லி நீர்வள அமைச்சர் பர்வேஷ் வர்மா,

ஹரியாணா, தில்லிக்கு யமுனை நதிநீரை நிறுத்துவன் மூலம் ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாப் அரசு மோசமான அரசியலில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

தில்லியில் தோல்வியடைந்த பிறகு அவர்கள் தில்லியில் தண்ணீர் நெருக்கடியை உருவாக்க விரும்புகிறார்கள். இருப்பினும், வியாழக்கிழமை நிலவரப்படி நீர் விநியோகம் வழக்கம்போல் பராமரிக்கப்படுவதாக தில்லி நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தில்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான நீர் வழங்க இரவும், பகலும் உழைத்து வருகிறோம். ஆனால் பஞ்சாப் அரசு தில்லி மக்களைப் பழிவாங்க விரும்புகிறது. இந்த மோசமான அரசியலை நிறுத்துங்கள், இல்லையெனில் பஞ்சாபிலிருந்தும் வெளியேற்றப்படுவீர்கள் என்று வர்மா கூறினார்.

பாஜக 400 இடங்கள் பெற்றிருந்தால் இடஒதுக்கீடு நீக்கப்பட்டிருக்கும்: தெலங்கானா முதல்வர்!

மக்களவையில் பாஜக 400 இடங்கள் பெற்றிருந்தால் இடஒதுக்கீடானது ரத்து செய்யப்பட்டிருக்கும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். மத்திய அரசை அமைத்துள்ள பாஜக மட்டும் மக்களவத் தேர்தலில் 400 இடங்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு முன், 3 இடங்களுக்கு குறிவைத்த பயங்கரவாதிகள்?

பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக ஜம்மு - காஷ்மீரில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் சாலை ஒப்பந்ததாரர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொலை!

ஜார்க்கண்டின் லதேஹர் மாவட்டத்தில் சாலை ஒப்பந்த மேற்பார்வையாளர் ஒருவர் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.புதன்கிழமை இரவு மஹுவாதன்ர் காவல் நிலையப் பகுதியில் உள... மேலும் பார்க்க

மாணவர்களிடமிருந்து ரூ.250 கோடி வசூலித்த தனியார் பயிற்சி மையம்: அமலாக்கத் துறை!

நாடு முழுவதும் தனியார் பயிற்சி மையத்தின் அலுவலகங்களில் இரண்டு நாள்கள் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதாகக் கூறி 14,000 மாணவர்களிடமிருந்து ரூ.250 கோடியை பெற்று மோசடி... மேலும் பார்க்க

நாடுகடத்தப்பட வேண்டிய பாகிஸ்தானியர் ஒருவர் திடீர் மரணம்!

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு நாடுகடத்தப்பட வேண்டிய நபர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் எண்ம ‘கேஒய்சி’ நடைமுறைகள்: மத்திய அரசு, ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முகச்சிதைவு கொண்டவா்கள், பாா்வைத்திறனற்றவா்கள், பாா்வைத்திறன் குறைபாடு கொண்டவா்கள் ஆகியோா் ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) நடைமுறையை எண்ம (டிஜிட்டல்) ... மேலும் பார்க்க