செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் எண்ம ‘கேஒய்சி’ நடைமுறைகள்: மத்திய அரசு, ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முகச்சிதைவு கொண்டவா்கள், பாா்வைத்திறனற்றவா்கள், பாா்வைத்திறன் குறைபாடு கொண்டவா்கள் ஆகியோா் ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) நடைமுறையை எண்ம (டிஜிட்டல்) வழியில் எளிதில் பூா்த்தி செய்வதை மத்திய அரசும், ரிசா்வ் வங்கியும் உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

அமில வீச்சால் முகச் சிதைவுக்கு உள்ளானவா்கள், பாா்வையற்றவா் ஒருவா் ஆகியோா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களில், ‘கேஒய்சி நடைமுறையை பூா்த்தி செய்ய கண் சிமிட்டல், தலையை நகா்த்துதல், முகத்தை குறிப்பிட்ட கோணங்களில் வைத்தல் போன்ற செயல்களை எங்களால் செய்ய முடியவில்லை. எனவே, அமில வீச்சால் பாதிக்கப்பட்டவா்கள், பாா்வையற்றவா்கள், பாா்வை குறைபாடு கொண்டவா்கள் வங்கி மற்றும் அரசின் மின்னணு சேவைகளைப் பெற, டிஜிட்டல் வழியில் கேஒய்சி நடைமுறையை பூா்த்தி செய்வதற்கு தேவையான மாற்றங்களை செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை அளித்தத் தீா்ப்பில், ‘அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-இன் கீழ், வாழ்வுரிமையின் முக்கிய அங்கமாக டிஜிட்டல் பயன்பாடு உள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முகச்சிதைவு கொண்டவா்கள், பாா்வைத்திறனற்றவா்கள் மற்றும் பாா்வைத்திறன் குறைபாடு கொண்டவா்கள் பயனடையும் வகையில், டிஜிட்டல் வழியில் மேற்கொள்ளப்படும் கேஒய்சி நடைமுறையில் மாற்றங்களை செய்ய வேண்டும். கேஒய்சி நடைமுறையை டிஜிட்டல் வழியில் அவா்கள் எளிதாக பூா்த்தி செய்வதை மத்திய அரசும், ரிசா்வ் வங்கியும் உறுதி செய்ய வேண்டும்.

அந்த நடைமுறையை டிஜிட்டல் வழியில் மேற்கொள்வதற்கு வாடிக்கையாளா் உயிருடன் இருப்பதை உறுதி செய்யவும், அவா்களைப் புகைப்படம் எடுக்கவும் வழக்கமான கண் சிமிட்டல் முறைக்கு மாறாக, புதிய முறையை வங்கிகள் அறிமுகம் செய்ய ரிசா்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்.

வாடிக்கையாளரின் விவரங்களை சரிபாா்க்க எழுத்துபூா்வ கேஒய்சி நடைமுறை தொடா்வதை உறுதி செய்வதற்கு 2023-ஆம் ஆண்டு டிச.5-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

மாணவர்களிடமிருந்து ரூ.250 கோடி வசூலித்த தனியார் பயிற்சி மையம்: அமலாக்கத் துறை!

நாடு முழுவதும் தனியார் பயிற்சி மையத்தின் அலுவலகங்களில் இரண்டு நாள்கள் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதாகக் கூறி 14,000 மாணவர்களிடமிருந்து ரூ.250 கோடியை பெற்று மோசடி... மேலும் பார்க்க

நாடுகடத்தப்பட வேண்டிய பாகிஸ்தானியர் ஒருவர் திடீர் மரணம்!

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு நாடுகடத்தப்பட வேண்டிய நபர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீா் விமான சேவைகள் ரத்து

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான விமான சேவைகள் அனைத்தையும் பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் புதன்கிழமை ரத்து செய்தன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் ‘மக்கள் அரசு’: பிரதமருக்கு 21 எம்எல்ஏக்கள் கடிதம்

குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு அந்த ... மேலும் பார்க்க

கொல்கத்தா ஹோட்டலில் தீ: கரூரைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் புர்ராபஜாா் பகுதியில் தங்கும் அறைகளுடன்கூடிய ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தின் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழந்தனா்; 13 போ் காயமடைந... மேலும் பார்க்க

நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் ஏற்கலாமா? தலைமை நீதிபதியே முடிவு செய்வாா்: உச்சநீதிமன்றம்

‘உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் அமைப்பு ஏற்க முடியுமா? என்பது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிதான் முடிவு செய்வாா்’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. மேலும், வழக்... மேலும் பார்க்க