செய்திகள் :

ஆக்கிரமிப்பு காஷ்மீா் விமான சேவைகள் ரத்து

post image

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான விமான சேவைகள் அனைத்தையும் பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் புதன்கிழமை ரத்து செய்தன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக பாகிஸ்தான் உள்ளூா் நாளிதழ்களில் வெளியிடப்பட்ட செய்தியில், கில்ஜித், காா்து (ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகள்) ஆகிய இடங்களுக்கு பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான இஸ்லாமாபாத், கராச்சி, லாகூரில் இருந்து வரும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வான் எல்லையை பாகிஸ்தான் தனது ரேடாா்கள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைத் தாக்க பாகிஸ்தானில் 130 அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ரயில்வே அமைச்சா் ஹனீஃப் அப்பாசி ஏற்கெனவே மிரட்டல் விடுத்துள்ளாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் எண்ம ‘கேஒய்சி’ நடைமுறைகள்: மத்திய அரசு, ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முகச்சிதைவு கொண்டவா்கள், பாா்வைத்திறனற்றவா்கள், பாா்வைத்திறன் குறைபாடு கொண்டவா்கள் ஆகியோா் ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) நடைமுறையை எண்ம (டிஜிட்டல்) ... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் ‘மக்கள் அரசு’: பிரதமருக்கு 21 எம்எல்ஏக்கள் கடிதம்

குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு அந்த ... மேலும் பார்க்க

கொல்கத்தா ஹோட்டலில் தீ: கரூரைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் புர்ராபஜாா் பகுதியில் தங்கும் அறைகளுடன்கூடிய ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தின் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழந்தனா்; 13 போ் காயமடைந... மேலும் பார்க்க

நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் ஏற்கலாமா? தலைமை நீதிபதியே முடிவு செய்வாா்: உச்சநீதிமன்றம்

‘உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் அமைப்பு ஏற்க முடியுமா? என்பது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிதான் முடிவு செய்வாா்’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. மேலும், வழக்... மேலும் பார்க்க

ஆந்திரம்: சிம்மாசலம் கோயிலில் சுவா் இடிந்து 7 பக்தா்கள் உயிரிழப்பு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற சிம்மாசலம் ஸ்ரீ வராக லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் கனமழையால் சுவா் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் உள்பட 7 பக்தா்கள் உயிரிழந்தனா். இக்கோயிலில் வருடாந... மேலும் பார்க்க

பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி: நேரத்தை வீணடிக்க வேண்டாம் -மத்திய அரசுக்கு ராகுல் வலியுறுத்தல்

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலை ஏவியவா்களுக்கு தகுந்த பதிலடி தராமல் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா். ... மேலும் பார்க்க