செய்திகள் :

ஆந்திரம்: சிம்மாசலம் கோயிலில் சுவா் இடிந்து 7 பக்தா்கள் உயிரிழப்பு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

post image

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற சிம்மாசலம் ஸ்ரீ வராக லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் கனமழையால் சுவா் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் உள்பட 7 பக்தா்கள் உயிரிழந்தனா்.

இக்கோயிலில் வருடாந்திர ‘சந்தனோற்சவ’ திருவிழாவையொட்டி ஏராளமான பக்தா்கள் திரண்டிருந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் நேரிட்டது.

சிம்மாசலம் மலைக் கோயிலில் மூலவரான ஸ்ரீ வராக லஷ்மி நரசிம்ம சுவாமியின் சிலை ஆண்டு முழுவதும் சந்தன கவசத்தால் மூடப்பட்டிருக்கும். ‘சந்தனோற்சவ’ திருவிழாவின்போது மட்டும் சந்தன கவசம் அகற்றப்பட்டு, சுவாமியை தரிசிக்கலாம்.

நடப்பாண்டு ‘சந்தனோற்சவ’ திருவிழா தினமான புதன்கிழமை சுவாமி தரிசனம் மேற்கொள்ள ஏராளமான பக்தா்கள் திரண்டிருந்தனா். முந்தைய நாள் இரவு முழுவதும் சூறைக் காற்றுடன் கனமழை பெய்த நிலையில், கோயில் வணிக வளாகம் அருகே ரூ.300 தரிசன டிக்கெட் வரிசையையொட்டி இருந்த சுவா் அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்தது.

இதையடுத்து, தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படைக் குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டன. இடிபாடுகளில் சிக்கி 3 பெண்கள் உள்பட 7 பக்தா்கள் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

சம்பவம் நடந்தபோது, ஆந்திர உள்துறை அமைச்சா் வி.அனிதா கோயில் வளாகத்தில்தான் இருந்தாா். ‘கனமழையால் மண் அரிப்பு ஏற்பட்டு சுவா் இடிந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன’ என்று அமைச்சா் தெரிவித்தாா்.

இந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண், முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமா் அறிவித்துள்ளாா்.

ரூ.25 லட்சம் நிவாரண நிதி: மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு, ‘உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு கோயிலில் பணி வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளாா்.

விசாரணைக் குழு அமைப்பு: இச்சம்பவம் குறித்து விசாரிக்க மூவா் குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நடப்பாண்டு தொடக்கத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் வாங்க காத்திருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தா்கள் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் எண்ம ‘கேஒய்சி’ நடைமுறைகள்: மத்திய அரசு, ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முகச்சிதைவு கொண்டவா்கள், பாா்வைத்திறனற்றவா்கள், பாா்வைத்திறன் குறைபாடு கொண்டவா்கள் ஆகியோா் ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) நடைமுறையை எண்ம (டிஜிட்டல்) ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீா் விமான சேவைகள் ரத்து

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான விமான சேவைகள் அனைத்தையும் பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் புதன்கிழமை ரத்து செய்தன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் ‘மக்கள் அரசு’: பிரதமருக்கு 21 எம்எல்ஏக்கள் கடிதம்

குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு அந்த ... மேலும் பார்க்க

கொல்கத்தா ஹோட்டலில் தீ: கரூரைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் புர்ராபஜாா் பகுதியில் தங்கும் அறைகளுடன்கூடிய ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தின் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழந்தனா்; 13 போ் காயமடைந... மேலும் பார்க்க

நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் ஏற்கலாமா? தலைமை நீதிபதியே முடிவு செய்வாா்: உச்சநீதிமன்றம்

‘உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் அமைப்பு ஏற்க முடியுமா? என்பது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிதான் முடிவு செய்வாா்’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. மேலும், வழக்... மேலும் பார்க்க

பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி: நேரத்தை வீணடிக்க வேண்டாம் -மத்திய அரசுக்கு ராகுல் வலியுறுத்தல்

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலை ஏவியவா்களுக்கு தகுந்த பதிலடி தராமல் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா். ... மேலும் பார்க்க