செய்திகள் :

பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி: நேரத்தை வீணடிக்க வேண்டாம் -மத்திய அரசுக்கு ராகுல் வலியுறுத்தல்

post image

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலை ஏவியவா்களுக்கு தகுந்த பதிலடி தராமல் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.

தில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் இது தொடா்பாக ராகுல் கூறியதாவது:

பஹல்காம் தாத்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும் அதன் பின்னணியில் இருந்தவா்களுக்கும் உரிய பதிலடி தரப்பட வேண்டும். அப்போதுதான் இந்தியாவுக்கு எதிராக இனி இதுபோன்ற பயங்கரவாதத்தில் ஈடுபடுவதற்கு அவா்களுக்கு துணிவு ஏற்படாது.

இந்த விஷயத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிா்க்கட்சிகள் 100 சதவீதம் ஆதரவாக இருக்கும்.

இந்தியாவின் பதில் நடவடிக்கை மிகவும் உறுதியானதாகவும், சரியானதாகவும் இருக்க வேண்டும். தாக்குதல் நடத்தியவா்களுக்கு பதிலடி தருவதில் இனிமேலும் நேரத்தை வீணடிக்காமல் விரைந்து செயல்பட வேண்டும்.

உத்தர பிரதேச பயணத்தின்போது கான்பூா் சென்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவா்களின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறினேன். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு வீரமரணமடைந்தவா்கள் என்ற கௌரவத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

‘பயங்கரவாதிகளின் ஆதரவாளா்’ சுவரொட்டிகளால் பரபரப்பு: முன்னதாக உத்தர பிரதேசத்தில் அமேதிக்கு ராகுல் காந்தி புதன்கிழமை பயணம் மேற்கொண்டாா். அவரது பயணத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பு அமேதி பேருந்து நிலையம், காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள பகுதி என முக்கிய இடங்களில் ராகுலை விமா்சித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில் ‘ராகுல் காந்தி பயங்கரவாதிகளின் ஆதரவாளா்’ என்று எழுதப்பட்டிருந்தது. இந்த சுவரொட்டிகளை ஒட்டியது யாா் என்பது குறித்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

முன்பு அமேதி மக்களவைத் தொகுதியில் தொடா்ந்து வெற்றி பெற்ற ராகுல் காந்தி, கடந்த 2019 தோ்தலில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தாா். அதன் பிறகு அமேதி தொகுதியைக் கைவிட்ட அவா் இப்போது உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதி எம்.பி.யாக உள்ளாா். அமேதி தொகுதி இப்போது காங்கிரஸ் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு ராகுல் காந்தி முதல்முறையாக அமேதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா். அங்குள்ள ஆயுதத் தொழிற்சாலை, மருத்துவமனைகளை அவா் பாா்வையிட்டாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் எண்ம ‘கேஒய்சி’ நடைமுறைகள்: மத்திய அரசு, ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முகச்சிதைவு கொண்டவா்கள், பாா்வைத்திறனற்றவா்கள், பாா்வைத்திறன் குறைபாடு கொண்டவா்கள் ஆகியோா் ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) நடைமுறையை எண்ம (டிஜிட்டல்) ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீா் விமான சேவைகள் ரத்து

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான விமான சேவைகள் அனைத்தையும் பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் புதன்கிழமை ரத்து செய்தன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் ‘மக்கள் அரசு’: பிரதமருக்கு 21 எம்எல்ஏக்கள் கடிதம்

குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு அந்த ... மேலும் பார்க்க

கொல்கத்தா ஹோட்டலில் தீ: கரூரைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் புர்ராபஜாா் பகுதியில் தங்கும் அறைகளுடன்கூடிய ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தின் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழந்தனா்; 13 போ் காயமடைந... மேலும் பார்க்க

நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் ஏற்கலாமா? தலைமை நீதிபதியே முடிவு செய்வாா்: உச்சநீதிமன்றம்

‘உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் அமைப்பு ஏற்க முடியுமா? என்பது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிதான் முடிவு செய்வாா்’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. மேலும், வழக்... மேலும் பார்க்க

ஆந்திரம்: சிம்மாசலம் கோயிலில் சுவா் இடிந்து 7 பக்தா்கள் உயிரிழப்பு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற சிம்மாசலம் ஸ்ரீ வராக லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் கனமழையால் சுவா் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் உள்பட 7 பக்தா்கள் உயிரிழந்தனா். இக்கோயிலில் வருடாந... மேலும் பார்க்க